புத்த பூர்ணிமா கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து

2


புதுடில்லி: புத்த பூர்ணிமா இன்று (மே 01) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானம் பெற்ற அதே நாளும் சேர்த்து புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தை புத்த பூர்ணிமா தினமாகவும் புத்த ஜெயந்தி தினமாகவும் மிகவும் விமரிசையாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புத்த பூர்ணிமா விழா இன்று(மே 01) கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அவரது பதிவு: புத்த பூர்ணிமா நல்வாழ்த்துகள். பகவான் புத்தரின் உயரிய லட்சியங்களை நனவாக்குவதில் எங்களின் உறுதிப்பாடு மிகவும் வலுவானது. அவரது சிந்தனைகள் நம் சமூகத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள, 'சாய் குல்வந்த்' அரங்கில், இன்றும் நாளையும் புத்த பவுர்ணமி விழா நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement