ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடி; முந்தைய ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகம்
நமது நிருபர்
நாட்டில் இந்தாண்டு ஏப்ரல் ஜி.எஸ்.டி., வசூல், ரூ.2.43 லட்சம் கோடி. முந்தைய ஆண்டை காட்டிலும் 8.7 சதவீதம் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதம் வசூல் ஆன தொகையை விட 8.7 சதவீதம் அதிகம். ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டு உள்ளது.
உள்நாட்டு மொத்த வருமானம் 4.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.85 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் 25.8 சதவீதம் அதிகரித்து ரூ.57,580 கோடியாகவும் உள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாயில் இருந்து தமிழகத்தின் பங்காக ரூ.8413 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் 46% சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழல்கள் நீடித்த போதிலும், வணிகங்கள் ஏதும் பாதிப்பு இல்லாமல் நடந்துள்ளது என இந்த ஜிஎஸ்டி வசூல் தெளிவுப்படுத்தி உள்ளது. இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி உயர்ந்ததே, வசூல் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த மாதங்களில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் பின்வருமாறு:
* ஏப்ரல் (2026)- ரூ.2.43 லட்சம் கோடி
* மார்ச் (2026)- ரூ.2.01 லட்சம் கோடி
* பிப்ரவரி (2026)- ரூ.1.83 லட்சம் கோடி
* ஜனவரி (2026)- ரூ.1.93 லட்சம் கோடி
* டிசம்பர் (2025)- ரூ.1.74 லட்சம் கோடி
* நவம்பர் (2025)- ரூ.1.70 லட்சம் கோடி
வாசகர் கருத்து (5)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
01 மே,2026 - 19:03 Report Abuse
வரி உயர்வு நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது. மேற்காசிய போர் நடந்து, சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு இருந்தும், நாடு எட்டு சதவீத வளர்ச்சி பெறுகிறது. 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
01 மே,2026 - 18:03 Report Abuse
இதுவரையில் மற்றவர்காளுடைய ஆதார் என்னை பயன்படுத்தி புதிதாக வியாபாரம் ஆரம்பித்து 15000 வரி ஏய்ப்புகள் நடந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன .ஆனால் இதை தடுக்கும் நடவடிக்கை ஏதும் காணோம் .அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் தட்டி எழுப்புங்கள் .இதை தடுப்பது மிகவும் சுலபம் .AI பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக தடுக்கலாம் .ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .ஒருவேளை வேலியே பயிரை மேய்கின்றதா ?மக்கள் வரிப்பணம்தானே போகட்டும் என்று மெத்தனமா ?நான் அதிகாரத்தில் இருந்தால் பொறுப்பானவர்களை உடனே டிஸ்மிஸ் செய்வேன் .அரசில் தவறு ஒருமுறைதான் நடக்கலாம் .15000 தவறுகளை எப்படி தூங்குகிண்றீர்கள் .புதிதாக gst ரெஜிஸ்டரேஷன் எல்லோருக்கும் welcome லெட்டர் ஆதார் எண்ணின் விலாசத்துக்கு மாநில மொழியில் அனுப்புங்க .தவரு இருக்கும்பட்சத்தில் உடனே தெரியப் படுத்துவங்க .இல்லைஎன்றால் உறுதிபடுத்த சொல்லுங்கள் .பதில்வராத நிலையில் நேரில் சென்று ஆய்வு செய்யுங்கள் .இதை தடுக்கவில்லையென்றால் உள்ளடி வேலை என்று கருதலாம் . 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
01 மே,2026 - 14:05 Report Abuse
அதவது GST வரி விகிதங்கள் மாற்றி அமைத்து , அப்போ மக்கள் எப்படி வரி மூலம் கசக்கி பிழிய படுகிறார்கள் , பாருங்கள் அதுவம் ஏழை நடுத்தர மக்கள் தான் பாதிப்பு அதிகம் 0
0
Reply
Raghu - ,இந்தியா
01 மே,2026 - 13:47 Report Abuse
இன்னும் மிச்சம் மீதி இருப்பது டீசல் பெட்ரோல் விலை உயர்வு மட்டுமே அதையும் உயர்த்தி கொள்ளையடித்தால் ஜிஎஸ்டி வரியில் அடுத்த மாதமே இரண்டு மடங்கு பகல் கொள்ளை அடிக்கலாம் சர்வதேச விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்கு தராமல் விலை உயர்வின் போது மட்டும் மக்கள் மீது விலை உயர்வை சுமத்தும் விஷ்வகுரு & கோ வாழ்க கடந்த 4 வருடமாக ஒத்த பைசா குறைக்கவில்லை 0
0
Reply
ஆரூர் ரங் - ,
01 மே,2026 - 13:44 Report Abuse
வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகும் வசூல் அதிகமாகியதற்குக் காரணம் வரிஏய்ப்பு கடினமாகி விட்டதால்தான். போர் காரணமாக ஏற்பட்டுள்ள ஏற்றுமதி சரிவு கூட வசூலை பாதிக்காதது ஆச்சர்யம். 0
0
Reply
மேலும்
-
இங்கிலாந்து டெஸ்ட்: சான்ட்னர் விலகல்
-
ஆசிய ஐஸ் ஹாக்கி: இந்தியா வெற்றி
-
இந்தியாவிடம் வீழ்ந்தது சீனதைபே: தாமஸ் பாட்மின்டன் காலிறுதியில்
-
ராஜஸ்தானில் நகை வியாபாரி தற்கொலை: சென்னை மாநகர போலீசாருக்கு சிக்கல்
-
டென்னிஸ்: அரையிறுதியில் மனாஸ்
-
கால்நடை மருத்துவர்கள் களப்பணிக்கு முன் அனுமதி பெறும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
Advertisement
Advertisement