புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் புத்த பூர்ணிமா விழா கோலாகலம்

2

நமது நிருபர்




ஆந்திரா, புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் புத்த பூர்ணிமா விழா இன்று (மே 01) காலை சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது; நாளையும் புத்த பூர்ணிமா விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.


ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள, 'சாய் குல்வந்த்' அரங்கில், இரண்டு நாட்கள் புத்த பூர்ணிமா விழா நடக்கிறது. இன்று (மே 01) காலை 8:00 மணிக்கு வேத பாரயணத்துடன் விழா துவங்கியது.

தொடர்ந்து 8:20க்கு விழா பற்றிய அறிமுகம்; 8:25க்கு புத்த துறவிகள் ஊர்வலம், 8:35க்கு விளக்கு ஏற்றுதல்; 8:40க்கு துறவிகளின் பூஜைகள், 8:50க்கு புத்த துறவி கெம்போ சம்டுக் லாமாவின் உரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை; 9:00க்கு பஜனை, மங்களாரத்தி நடைபெற்றது.



ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மற்றும் புத்த துறவிகள் ஏராளமானோர் புட்டபர்த்திக்கு வருகை தந்துள்ளனர். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஆர்.ஜே. ரத்னாகர் புத்தர் சிலையை திறந்து வைத்தார்.

இன்று மாலை 5:00 மணிக்கு வேதம்; 5:20க்கு தம்மிக்கா கலபுகே உரை; 5:30க்கு பால விகாஸ் சிறுவர்களின் நடனம்; 6:00க்கு தெய்வீக சொற்பொழிவு; 6:20 மணிக்கு பஜனை, மங்களாரத்தி நடக்கிறது.

நாளை (மே 2)



நாளை காலை 8:00 மணிக்கு வேதம்; 8:30க்கு பாரம்பரிய நாட்டுப்புற இசைக்குழு ஊர்வலம்; 8:40க்கு, 'ஓம் மணி பத்மே ஹும்' மந்திரத்தின் கூட்டு முழக்கம்; 8:50க்கு எஸ்.எஸ்.எஸ்.எஸ்., எனும் ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் ஹிமாச்சல பிரதேச தலைவர் பேராசிரியர் யோகிந்தர் வர்மாவின் உரை; 9:00க்கு புத்த தரிசனம் பற்றிய காணொளி; 9:05க்கு பஜனை, மங்களாரத்தி நடக்கிறது.

மாலை, 5:00 மணிக்கு வேதம்; 5:30க்கு, 'ரிதமிக் பீட்ஸ்' பெண்கள் வழங்கும் இசை நிகழ்ச்சி; 5:40க்கு பால விகாஸ் மாணவர்களின் நடனம்; 6:00க்கு பஜனை, மங்களாரத்தி நடக்கிறது.

Advertisement