தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: இன்னும் 2,3 நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிற உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலில் இந்தியாவிலேயே மே முதல் நாள் விழாவை சென்னையில் தான் கொண்டாட துவங்கி இருக்கிறோம். திமுகவினர் உழைத்திருக்கும் உழைப்பின் பலனை, வரும் மே 4ம் தேதி பெற இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை, துளி அளவும் கூட மாற்றமில்லை.
@quote@கருத்துக் கணிப்புகளை வைத்து கூறுகிறேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை.quote
இன்னும் 2,3 நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிற உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தொழிலாளர் நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
@block_P@
இது குறித்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உழைக்கும் கரங்களைப் போற்றுவோம்; உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
உழைப்பால் உயர்வோம் என்று இரவு பகலாக உழைத்து வரும் உழைப்பாளர்களுக்கான உரிமைகள் முழுமையாக அவர்களுக்கு கிடைக்க உழைப்பாளர்களின் வாழ்வாதாரம் மேலும் உயர உறுதியேற்போம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.block_P
@block_G@
இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேச வளர்ச்சிக்காக, தங்களின் வியர்வை சிந்தி, கடின உழைப்பைக் கொடுத்து, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றி. உழைப்பாளர்கள் உரிமை, பாதுகாப்பு, மரியாதை, இவற்றை உறுதி செய்வதே, நமது நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாக அமையும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.block_G
திமுக தோல்வி என்கிற நல்ல செய்தி எதிர் பார்த்து காத்து கொண்டு இருகிறோம்
நல்ல செய்தி வருமா? அப்ப திமுக புட்டுகிச்சா.....
"கருத்து கணிப்பு வைத்து மட்டுமே நான் பேசவில்லை". எழுதிக் கொடுத்த துண்டு சீட்டில் இருந்து பேசுகிறேன்.....
தமிழகம் வெல்லும் என்கிற நல்ல செய்தியா?
ஆமாம் தி மு க வராது என்கிற சேதி உறுதி
இனி இப்படி சொல்லி தேற்றிக்கொள்ளவேண்டியது தான்.
உண்மையாக உங்களுக்கு பணத்துக்காக மட்டுமே மக்கள் ஓட்டுப் போட்டு இருந்தால் அவர்கள் அவதிப்பட வேண்டியவர்கள்தான்.. டிசைன் அப்படி..
தேர்தல் முடிவு உமது முடிவு. துபாயில கூப்பிட்டறான். ஓடிப் போயிடுங்க.
தெரியும், அதிமுக ஆட்சி அமையும் .
தமிழகத்துக்கு நல்ல செய்தி. திருட்டு திராவிடத்துக்கு படு கெட்ட செய்தி தான் வரும்.மேலும்
-
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித் ஷா பாராட்டு
-
மானாமதுரையில் வெண்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகர் *ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
-
புட்டபர்த்தி பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் புத்த பூர்ணிமா விழா கோலாகலம்
-
ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் 2.11 லட்சம் கோடி ரூபாய்
-
இன்றைய நிகழ்ச்சிகள்
-
வேளாங்கண்ணிக்கு நாளை செல்கிறார் விஜய்