கட்டுக்குடிபட்டியில் மஞ்சுவிரட்டு
எஸ்.புதுார், மே 6-
எஸ்.புதுார் அருகே கட்டுக்குடிபட்டியில் மஞ்சுவிரட்டு நடந்தது.
இங்குள்ள செல்வவிநாயகர் மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. ஊர் கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு முதலில் சேவுகமூர்த்தி ஐயனார் கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத் தொடர்ந்து மற்ற மாடுகள் அவிழ்க்கப்பட்டன. ஏராளமான வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர். ஒரு சில மாடுகள் மட்டும் பிடிபட்டன, பல மாடுகள் வெளியேறின. அனைத்து மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எஸ்.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
-
தாம்பரம்-போடி சிறப்பு ரயில்
-
தலைமை பொறியாளர் 'சஸ்பெண்ட்'
Advertisement
Advertisement