சென்னையில் அதிரடி! ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது; போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
சென்னை: சென்னையில் நேற்று நடந்த அதிரடி வேட்டையில், போதைப் பொருட்கள் விற்பனை கும்பலை சேர்ந்த, 101 பேர், 133 ரவுடிகள் என, மொத்தம் 234 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், போதைப்பொருட்களை கட்டுப்படுத்தவும், ரவுடிகளை ஒடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில் நேற்று நடந்த சிறப்பு வேட்டையில், 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பல்வேறு காவல் நிலையங்களில் பழைய குற்றவாளிகள்.
மேலும், போதைப் பொருட்கள் விற்பனை கும்பலை சேர்ந்த, 101 பேர் சிக்கினர். இவர்களிடம் இருந்து, 21.4 கிலோ கஞ்சா, 1,070 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் எச்சரித்துள்ளார்.
இதேபோல் தாம்பரம் பகுதியில், நேற்று முன்தினம் நடந்த அதிரடி வேட்டையில், பழைய குற்றவாளிகள், போதை கும்பலை சேர்ந்த, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்பில் 5 பேர் ஓட்டேரி சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ், மதுரவாயல் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருபநிதி, மீனம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் புஷ்பராஜ், மாதவரம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் காதர் மீரா, வானகரம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் கண்ணகி ஆகிய, ஐந்து பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டுள்ளார்.
அய்யயோ அப்போ 234 எம் எல் ஏ க்களையும் கைது செஞ்சாச்சா??? ஏன்னா டாஸ்மாக்கினாட்டில் எம் எல் ஏ ன்னா ரவுடி, ரவுடின்னா எம் எல் ஏ. இது தானே 1967 லிலிருந்து 59 வருடமாக நடந்துகொண்டிருக்கின்றது
அடடா தயவு தாட்சனை பார்க்காமல் மரண வேகம் சென்னையில் அதிரடி ஒரே நாளில் 100 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது...
Good initiative but need to see further action on them. All police station must be monitored in CCTV and all criminal records to be computerised duly d
Arrest All-Innumerable DMK VCK PMK etc Party Goondasமேலும்
-
பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு