முதல்வர் பதவிக்கு அடிதடி
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது. முதல்வர் யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை.
காங்கிரசோ, பா.ஜ.,வோ எதுவாக இருந்தாலும், மேலிடம் சொல்பவர் தான் முதல்வர். 'எம்.எல்.ஏ.,க்களின் கருத்தை கேட்டோம்' என, பேச்சுக்கு சொல்வரே தவிர, முடிவெடுப்பதோ கட்சிகளின் தலைமை தான்.
காங்., லோக்சபா எம்.பி., கே.சி.வேணுகோபால், கட்சியில் மிகவும், 'பவர்புல்' ஆனவர். ராகுலுக்கு மிகவும் நெருக்கம். இவர், முதல்வர் பதவி வேண்டும் என்கிறார். காங்., கூட்டணிக்கு, 102 தொகுதிகளில் வெற்றி. இதில் காங்., 63. இதில், 40 பேர் வேணுகோபாலின் ஆதரவாளர்கள்.
சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் காங்கிரசின் வி.டி.சதீஷன். 'இவரால் தான் காங்., வெற்றி பெற முடிந்தது' என்கின்றனர், இவரது ஆதரவாளர்கள். மூன்றாவதாக இருப்பவர் ரமேஷ் சென்னிதலா. இவரும், முதல்வர் பட்டியலில் உள்ளார் என்றாலும், அதிக வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.
ராகுல், தனக்கு நெருக்கமான வேணுகோபாலை தான் முதல்வராக நியமிப்பார் என, சொல்லப்படுகிறது. இதனால், சதீஷனின் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இருதரப்புக்கும் ஆங்காங்கே அடிதடி நடந்து கொண்டிருக்கிறது. கடைசியில், வேணுகோபாலுக்கு தான் அதிக வாய்ப்பு என்கிறது டில்லி காங்., வட்டாரம்.
நல்லது..... அப்படியே வேட்டியை கிழித்து கொள்ளுங்கள்..... பொருத்தமாக இருக்கும்.
இங்கே சட்டை கிழித்து வெளியே வந்தார்.அங்கே வேட்டி. சூப்பர்
கேரளாவில் தங்கள் கட்சிக்குள் நிலவும் சிக்கல்களால் மக்கள் கட்சி அமைக்க தேவையான இடங்களை கொடுத்தும் அரசு அமைக்காமல் காங்கிரஸ் நாட்களை நகர்த்தி வருகிறது. . பிரச்னைக்கு தீர்வு காணாமல் அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் விவகாரங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததால், இனி அக்கட்சி மூலமாக ராஜ்ய சபை இடங்களை எதிர்பார்க்க முடியாத சூழல் நிலவுவதால் விஜயின் ஆதரவு அதற்கு அவசியம் தேவை. அதை மனதில் வைத்து கொண்டும் மக்கள் ஆதரவை விஜய் மூலமாக புதுப்பித்து அரசியல் வியாபாரத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் தனக்கென ஒரு நிலையான வாக்கு வங்கி இல்லாத, அதிகாரம் மற்றும் ஆட்சி அரசியல் பசி கொண்ட காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்படும் முன் விஜய் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விஜய்யுடன் சேர்வதில் அக்கட்சிக்கு உள்ள அதிக ஆர்வம் முற்றிலும் சுயநலம் சார்ந்ததே தவிர, விஜய்யின் நலன் குறித்தோ அல்லது மாநிலத்தின் வளர்ச்சி குறித்தோ அது சிறிதும் கவலைப்பட போவதில்லை
காங்கிரஸ் உப்படாமல் போவதற்கு காரணமே வேலை செய்பவன் ஒருத்தன், பதவி அனுபவிப்பவன் மற்ற ஒருவன்
மக்களுக்கு சேவை செய்ய போட்டி .....
அடிதடிக்கு பதில் குடுமி பிடி சண்டை என்றால் பொருத்தமாக இருந்திருக்கும்
குடுமி இவர்களுக்கெல்லாம் இருக்குதாங்க >>
நாட்டுப்பற்று இல்லாதவர்கள் சுயநலப் பற்று தான் உள்ளவர்கள் என்றால் நாட்டின் தலையெழுத்து இப்படித்தான் இருக்கும் நன்றாக அடித்துக் கொள்ளட்டும் கேரள மக்களின் ஆணவம் அழியட்டும்
கேரளாவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் சமூக வாக்குப்பதிவில் கூர்மையான வேறுபாடுகள் நிலவுவதைக் காட்டுகின்றன. இந்து வாக்குகள் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆகியவற்றில் சிதறிப் போயுள்ள நிலையில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக மிகவும் உறுதியாக ஒன்று திரண்டுள்ளனர்.
கேரள மக்கள்தொகை அமைப்பானது, இந்துக்கள்: 54%, முஸ்லிம்கள்: 27%, கிறிஸ்தவர்கள்: 19%. சமூக வாரியான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டது. இந்து சட்டமன்ற உறுப்பினர்கள்: 69, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்: 71, மொத்த இடங்கள்: 140. 69 இந்து சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கீடு: ஐக்கிய ஜனநாயக முன்னணி: 39, இடதுசாரி ஜனநாயக முன்னணி: 27, தேசிய ஜனநாயகக் கூட்டணி:
3. 71 கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கீடு: ஐக்கிய ஜனநாயக முன்னணி: 63, இடதுசாரி ஜனநாயக முன்னணி: 8, தேசிய ஜனநாயகக் கூட்டணி: 0. இந்த எண்கள், இந்துக்கள் மதச்சார்பின்மையின் பெயரால் வாக்களித்ததையும், அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மூன்று முக்கிய கூட்டணிகளிடையே பிரிந்து கிடந்ததையும்,
எந்தவொரு கூட்டணியும் இந்து வாக்கு வங்கியை ஏகபோகமாக்குவதைத் தடுத்ததையும் காட்டுகின்றன. இதற்கு மாறாக, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இரண்டும் பெருமளவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை நோக்கியே சாய்ந்துள்ளதாகத் தெரிகிறது.
அதற்க்கு என்ன செய்வது மூளையய மழுங்க்கி ஒற்றுமையில்லை. இஙகும் திருட்டு திராவிடர் கும்பலிய்ய நம்புகிற கூட்டம் உள்ளது யிவய்ய திருந்தா ஜென்மங்கள். தேர் நியூலய்யய் ஹான் கேரளாவிலும் கம்மிகளால் மூளை சலவை செய்ய பட்டு இன்னும் திருந்த கிள்ளிய இப்போ கம்மிகள் பக்கமிருந்து இரண்டும் கெட்டானான ராகுலு விடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்திருக்கு.
இதே கவர்னர் தானே அங்கேயும். அங்கே ஏன் போராட்டம் நடத்தவில்லை?
இப்படி பதவிக்கு அடித்து கொள்பவர்களா மக்களுக்கு நன்மை செய்ய போரானுவோ...
காங்கிரஸ் இந்தியாவிலிருந்து துரத்தி அடிக்க பட வேண்டிய கட்சி...
மக்களின் ஆதரவு VD சதீஷிர்கு தான்.மேலும்
-
நல்லேந்தலில் ஜல்லிக்கட்டுகாளை முட்டி 18 பேர் காயம்
-
காரைக்குடியில் சீமான் அஞ்சலி
-
மக்களிடம் பீதியை உண்டாக்கும் ஏ.ஐ., தொழில் நுட்ப படங்கள்
-
கல்வி நிலையம், பஸ் ஸ்டாண்ட் அருகேஉள்ள மது பார்களையும் மூட கோரிக்கை
-
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
-
'ஸ்ட்ரீட் சைல்ட்' உலக கோப்பை கால்பந்து: அரை இறுதியில் இந்திய சிறுமியர் அணி