காரைக்குடியில் சீமான் அஞ்சலி

காரைக்குடி,மே 14-

காரைக்குடி சத்யா நகரை சேர்ந்த காசிலிங்கம் மகன் பிரபாகரன் 31. நா.த.க., மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டின் மாடியில் உள்ள அறையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். காரைக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Advertisement