கள்ளக்குறிச்சியில் த.வெ.க., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் த.வெ.க., நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு த.வெ.க., நகர செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் திலீப்குமார், சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர இணை செயலாளர் அருண், பொருளாளர் அருண்குமார், துணை செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர்.
த.வெ.க., தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்காகவும், 200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட 3 திட்டங்களை கையெழுத்திட்டு துவக்கி வைத்ததை, கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில், த.வெ.க., மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் சுரேந்திரன், நகர செயற்குழு உறுப்பினர்கள் சரூப்ராஜ், தேவராஜ், ஆனந்தராஜ், நடராஜ், வெங்கடேசன், விஜயபிரியன், கார்த்திக், வினோத் மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்த தவெக; சொல்கிறார் ஸ்டாலின்
-
கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு; 20 அமைச்சர்களும் பொறுப்பேற்பு
-
ஊட்டியில் துவங்கியது மலர் கண்காட்சி
-
பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி
-
அமெரிக்காவில் வான் சாகச நிகழ்வில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து
-
இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்