கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு; 20 அமைச்சர்களும் பொறுப்பேற்பு

14


திருவனந்தபுரம்: கேரள முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் வி.டி.சதீஷன், இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கேரள சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 102ல் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. காங்., மூத்த தலைவர்களான வேணுகோபால், சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவியதால், முடி வு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிடம் நடத்திய தீவிர ஆலோசனைகளுக்கு பின், சதீஷனின் பெயர் இறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காங்., மூத்தத் தலைவர் சதீஷன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது. திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், வி.டி.சதீஷனுக்கு, கேரள கவர்னர் அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன், காங்கிரசைச் சேர்ந்த 12 பேர், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எட்டு பேர் என, 20 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


முதல்வர்கள் பங்கேற்பு

பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரியங்கா, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் சித்தராமையா, ரேவந்த், சுக்விந்தர் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சியினரும்

விழாவில், பதவி விலகிய முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பினாய் விஸ்வம், பாஜ மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.




@block_B@

பிரதமர் வாழ்த்து



'கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ள சதீசனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்ற, புதிதாக அமைந்துள்ள கேரள அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். block_B

Advertisement