இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்த தவெக; சொல்கிறார் ஸ்டாலின்
தஞ்சை: சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்து விட்டதால் நாம் சோகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடந்த திமுக நிர்வாகி பூண்டி கலைச்செல்வனின் இல்லத்திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது; ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாகக் கருதி, பாடுபட்டுக் கொண்டிருப்பவன் தான் திமுக தொண்டன்.
நம்முடைய கட்சி என்பது கட்டமைப்பு கொண்ட கட்சி. எப்போது, பார்லி தேர்தல் முடிந்த பிறகு, நாம் நமது பணிகளை துவங்கி விட்டோம். பூத் கமிட்டி, ஒன்றிணைவோம் வா, எஸ்ஐஆர் பணி, இளைஞரணி, மகளிர் அணி மண்டல மாநாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை நாம் செய்தோம். ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாமல், பூத் கமிட்டி அமைக்கவில்லை, வாக்காளர்களை நியமிக்கவில்லை, பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கை ஏஜென்ட் கூட நியமிக்காதவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர். அது தவறில்லை.
சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி, ரொம்ப சுலபமாக, சிறு பிள்ளைகளை பிரசாரம் செய்ய வைத்து, அவர்களை அவர்களின் தாத்தா, அப்பா, அம்மா போன்ற பெரியவர்களிடையே குழந்தைகள் மூலமாக பிரசாரம் நடத்தி, ஒரு திட்டமிட்ட பணி முடிந்து விட்டது.
இனிமேல் உஷாராக இருந்து, அதையும் முறியடிக்கக் கூடிய வகையில் அந்தப் பணியை, நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் தீட்டியுள்ளோம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்று பணியாற்றுங்கள்.
எனக்கு இருக்கும் கவலை எல்லாம் இந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியப் பணிகளை தொடர்ந்து இன்னொரு 5 ஆண்டுகள் வாய்ப்புகள் கிடைத்தால், இன்னும் பல பணிகளை மேற்கொண்டிருப்போம். அது தடை பட்டு போய் விட்டது. இன்று நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், திமுகவின் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை உரிமையோடு மக்களிடையே எடுத்துச் சொல்லும் வகையில் பணியாற்றுவோம், எனக் கூறினார்.
நம் திட்டங்கள் இருக்கும் வரை நம் ஆட்சி தான். நாம் தான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.
DMK came by freebies, which was worse than Instagram
என்னதான் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் பிரச்சனை.. அதிகாரம் போய்விட்டது எனவே அதிகாரப்பசி.எல்லா துறைகளிலும் கொள்ளை கொள்ளை கொள்ளை. நீங்கள் கொள்ளை அடித்தது எல்லாம் திரும்ப தமிழக அரசு கஜானாவில் செலுத்தினால் தமிழ்நாட்டின் கடன் தீர்ந்துவிடும். இனிமேல் திராவிட கட்சிகள் தலை எடுக்க முடியாது மறுபடியும் தேர்தல் கொண்டு வந்தால் விஜய் 200 இடங்களில் நிச்சயம் ஜெயிப்பார் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது அடுத்த 20 வருடங்கள் விஜய் தான் முதல்வர். உங்கள் சகாப்தம் முடிந்து விட்டது.
complete lack of grace accept public verdict with humility do not belittle it
அதுக்காக சோகத்தில் இல்லை தலைவிரே .நம் செய்த ஊழல்களை எல்லாம் வெளிவரும் என்றுதான் சோகத்தில் இருக்கின்றோம் .இனிமேல் எங்கள் ஊழல்களையெல்லாம் விசாரிக்கக்கூடாது என்று அரசு பணத்தில் உச்சநீதிமன்றம் போகமுடியாதே என்ற கவலைதான் .
நீ தைரியம் உள்ள ஆளா இருந்தா டீவீகே ஆட்சியை கலைச்சி திரும்பவும் எலெக்ஷனை சந்தித்து பார். 20 சீட் கூட கிடைக்காது.
வெட்கம் இல்லாம ஆட்சியமைக்க கேடுகெட்ட தனமெல்லாம் பண்ணிவிட்டு யாருகிட்ட தைரியம் இருக்கான்னு கேட்கிற உன் கட்சி தலைவங்கிட்ட போய் சொல்லு. திராணியிருந்தா ஆட்சிய கலைச்சுட்டு தேர்தல சந்திக்கிற துணிவு இருக்கான்னு.
PHOTO SHOOT THARPERUMAI MAABERUM POYYUM PITHALAATAMUM MAFIA AATCHIYUM UNGALADHU TRADE MARK. ADHANAAL AATCHI PARIPONADHU. MLA KOODA AAGA MUDIYA VILLAI.. STALIN ARASIYALIL IRUNDHU VILAGATTUM. THAMIZH NADU VELLATUM.
1965 ஜனவரி 26க்குப் பின் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மூலம் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1967ல் ஆட்சிக் கட்டிலில் அமர உதவியது.அன்றைய பிரதமர்.திரு லால்பகதூர் சாஸ்திரி.இங்கு திரு பக்தவத்சலம் முதல்வர். இங்கு.காங்கிரஸ் இழந்த ஆட்சியை இன்னும் பிடிக்க முடியவில்லை.அன்று உதவியவர்கள் போல இன்று குழந்தைகள் திரு.விஜய் ஆட்சி மலர உதவி இருக்கிறார்கள்?சுவற்றில் எறிந்த பந்து நம்மிடம் தானே வருகிறது
கருணாநிதி மகன் தான நீ , ஏதோ காமராஜ் மகன் போல பேசுகிறாய்.
நம்ம ஆட்சிதான் நடக்குது நமக்குதான் ஆட்டையப் போட குடுப்பினை இல்லை
பாவம் இதைக்கூட உன்னுடைய ஐ டி விங் எழுதிக்கொடுத்துதானே சொல்றே???மேலும்
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்