உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் உயிரிழப்பு
லக்னோ: உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ், 38, உயிரிழந்தார்.
உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ். இவரது இளைய மகன் பிரதீக் யாதவ், 38,. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவசரமாக லக்னோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இவர் பாஜ தலைவர் அபர்ணா யாதவின் கணவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சகோதரரும் ஆவார்.
பிரதீக் யாதவ் நீண்ட காலமாக நுரையீரல் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (1)
பப்பு யாதவ, உ பி - ,
13 மே,2026 - 11:20 Report Abuse
இதில் சமாஜவாதி கட்சியின், குறிப்பாக அகிலேஷ் யாதவ் வின் தொடர்பு பற்றி ஆழ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் 0
0
Reply
மேலும்
-
சிறப்பு கூறு திட்டம்.. அன்றும் இன்றும்!
-
சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள்
-
குடிநீர், உணவுக்காக வெளியேறும் வன விலங்குகள்... பாதுகாக்கப்படுமா?:வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் பரிதாபம்
-
வட மாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வீடியோக்கள்; சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி
-
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
போர் வீரர்களின் நடுகற்கள் வி.சாத்தனுாரில் கண்டெடுப்பு
Advertisement
Advertisement