நீதிமன்றத்தில் டூவீலர் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்:கூமாபட்டியை சேர்ந்தவர் சண்முகப்பிரியன் 27, இவர் ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

மே 11ல் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க அலுவலகம் முன்பு தனது டூவீலரை நிறுத்தி விட்டு நூலகத்திற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது டூவீலரை காணவில்லை. ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement