நீட் தேர்வு ரத்து கோரி காங்., ஆர்ப்பாட்டம்

கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் , மாநில அரசே நடத்த அனுமதிக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவே, சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன்சூட்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி, மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட, வட்டார காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement