சிவகங்கையில் மினிமாரத்தான் ஓட்டம்   

சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கான மினி மாரத்தான் ஓட்டபந்தயம் நடந்தது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கும் நோக்கில் 'கிட் ஓடு ரன்' என்ற பெயரில் மினி மாரத்தான் ஓட்டபந்தயம் நடத்தினர்.

இப்போட்டியில் வயது 1 முதல் 3, 4 முதல் 8, 9 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 3 பிரிவுகளாக நடந்ததில், 360 பேர் வரை பங்கேற்றனர். குழந்தைகளுக்கு 500 மீ., மற்றவர்களுக்கு 1 மற்றும் 2 கி.மீ., துாரம் என நிர்ணயித்து நடத்தினர்.

கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ் துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிச, சான்றுகள், பதக்கம், டி.சர்ட்கள் வழங்கினர். குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக இந்த மினி மாரத்தான் நடந்தது.

Advertisement