மனைவி மாயம்கணவர் புகார்

மல்லசமுத்திரம் :எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் கிராமம், போயர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன், 55; மனைவி சாரதா, 51; இதில், அன்பழகன் அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த, 12 காலை, 11:00 மணி முதல் சாரதாவை காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

நேற்று, காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு, அன்பழகன் அளித்த புகார்படி, எலச்சிபாளையம் போலீசார், சாரதாவை தேடி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Advertisement