காசநோயை ஒழிக்க சித்த மருத்துவத்துடன் கை கோர்ப்பு
சென்னை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், காசநோயை இல்லாத, இந்தியாவை உருவாக்க, பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
அதன்படி, ஐ.சி.எம்.ஆர்., - தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இணைந்து செயல்படும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குனர் நா.ஜெ.முத்துகுமார், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீநாத் சத்யநாராயணா ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பாரம்பரிய சித்த மருத்துவத்தின் வாயிலாக, காசநோய்க்கான மருத்துவ பரிசோதனைகள், மேம்பட்ட புதுமையான மருந்துகள் ஆகியவற்றில், இரு துறை நிபுணர்களும் இணைந்து பணியாற்றுவர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி
-
தமிழகத்தில் தகதகக்கும் வெயில்; 16 இடங்களில் அடித்தது சதம்
-
குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
-
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணயில் ஈடுபட்ட மின்ஊழியர்கள்
-
பொது பாதை தொடர்பாக தகராறு 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
-
த நியூ ஜான்டூயி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
Advertisement
Advertisement