'உதயநிதிக்கு நல்ல புத்தி கொடு': தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை
கோவை: சமீபத்தில் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, 'சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், உதயநிதிக்கு நல்ல புத்தி வழங்க வேண்டி, கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை செய்தார்.
பின் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:
சங்க தமிழர்கள் சனாதன ஹிந்து தர்மத்தை பின்பற்றினர். சனாதனம் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது சனாதனம். அந்த கொள்கையை ஏற்றவர் அண்ணாதுரை. துர்கா ஸ்டாலினே சனாதன கொள்கையை தான் பின்பற்றுகிறார்.
உதயநிதி, ஹிந்து தர்மத்தை விமர்சித்து வருகிறார். அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என காட்டிக்கொள்ளும் முதல்வர் விஜய், இதை கண்டித்திருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகிகளும் சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்கின்றனர்.
அவர்கள் வன்மத்துடன் செயல்படுகின்றனர். அதற்கு விஜய் பலியாகி விடக்கூடாது. இதை தமிழ் மண் மன்னிக்காது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவங்க அம்மா அத தான் பண்றங்க ஆனா புத்தி வரல
இந்த ஆள்கள் மலிவான விளம்பரம் தேடுகிறார்கள்
dailiyum உங்க news paper la வரணும்
தமிழக இந்துக்களுக்கு நல்ல புத்தியும் உண்மையான பக்தியும் கொடுக்க சொல்லி வேண்டுங்கள்.நாம எல்லாம் கடவுளிடம் பிச்சை எடுக்க செல்கிறோம்.உண்மையான பக்தியோ நம்பிக்கையோ இல்லை.அப்படி இருந்தால் நம் கடவுளை மட்டும் இல்லை இல்லை என்றும் கேலி செய்பவர்கள் வெற்றி பெறுவார்களா?
Vaippila raja vaippila Udaiya nithikku arrivai varathu
விஜய் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்ல வேண்டும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று யாகம் செய்தவர் தன்னுடைய அறையில் கடவுள் எதிர்ப்பு கொள்கை கொண்ட பெரியார் படத்தை மாட்டி வைத்திருக்கிறார். ஏதாவது ஒரு கொள்கையில் இருக்க வேண்டும்.
விஜய் முதல் மாநாட்டிலேயே, ஈரோடு ராமசாமியின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டார். பிறகு உங்களுக்கு என்ன சந்தேகம்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல் திருக்குறள்- 959 நிலத்தின் மாண்பை பயிர் காட்டும்! குலத்தை ஒருவர் வாய்ச் சொல் காட்டும்! இது தோற்பிக் கரணம் போட்டால் மாறி விடுமா?
விதியின் விளையாட்டு
கடந்த 72 மணி நேரத்தில் சுவேந்து மற்றும் விஜய்யின் சாதனைகளைப் பட்டியலிடுமாறு ஒரு பாஜக தொண்டரிடமும் ஒரு விஜய் ரசிகரிடமும் கேட்டேன்:
பாஜக தொண்டர்:
> 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்ரிஹாட்டாவில் மெட்ரோ பணிகள் தொடங்கின
> தகுந்த அரசு அனுமதியின்றி இயங்கி வந்த அனைத்து சட்டவிரோத சுங்கச்சாவடிகள், நுழைவாயில்கள் மற்றும் தடுப்புகள் மூடப்பட்டன
> பசுக்கள் மற்றும் பிற விலங்குகளைப் பகிரங்கமாகக் கொல்வது தடை செய்யப்பட்டது.
> ஆர்.ஜி. கர் வழக்கு, ஆட்சேர்ப்பு ஊழல்கள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்டு, அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
> அனைத்து மத்திய அரசு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விஜய் ரசிகர்:
> விஜய் தனது நாற்காலியில் இருந்து வெள்ளைத் துண்டை அகற்றினார்.
> விஜய் 24 மணி நேரத்திற்குள் தனது சிறப்பு அதிகாரியை OSD நீக்கினார்.
> பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார்
> நீட் NEET தேர்வைத் திரும்பப் பெறக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
இப்போது ஒரு தலைவருக்கும் ஒரு நடிகருக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும் .....
விஜய் தமிழக மக்களின் பார்வை
>மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் உரிமைத்தொகை விடுவித்துள்ளார்
>717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்
>200 யூனிட் மின்சாரம் ஏழைகளுக்கு கட்டணமில்லை என உத்தரவிட்டுள்ளார்
>அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்
>போதை பொருள் தடுக்க தனி படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்
>பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்பெண்கள் தனி படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
>அனைத்து துறை அதிகாரிகளுடன் இப்போதய சூழ்நிலை குறித்தும் அடுத்து செய்யவேண்டியது குறித்தும் விவாதித்து உத்தரவிட்டுவருகிறார். .
>தொழில்த்துறை சார்தவர்களை அழைத்து முதலீட்டை அதிகரிக்க வழிவகை செய்துவருகிறார்.
>சட்டம் ஒழுங்கு முன்பதைவிட இப்பொது கட்டுப்பாடுகளை அதிகரித்து உத்தரவிட்டுவருகிறார்.
>முந்தைய அரசுகளின் நல்ல திட்டங்கள் செயல்படும் என உத்தரவிட்டுள்ளார்.
>அரசு ஊழியர்களை சரியான நேரத்திற்கு வர உத்தரவிட்டுவருகிறார்.
>தமிழக மக்களின் மனநிலையில் மாற்றங்களை காணமுடிகிறது.