அதிமுகவின் இன்றைய நிலைக்கு அவர் ஒருவர் தான் காரணம்; செங்கோட்டையன் பாய்ச்சல்
கோவை: 'எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இயக்கம் அவரால் இன்றைக்கு வலுவிழந்து இருக்கிறது. நான் ஒருவரே போதும் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார்' என, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.,ஐ நிதியமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக சாடியுள்ளார்.
2 நாள் தான்…
அதிமுகவுக்கு எவ்வளவு அமைச்சர்கள் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்; நாங்கள் இதுவரை எதுவும் கூறவில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்.
இப்போது தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. நான் இப்போது தான் சென்னைக்கு செல்கிறேன். அதற்குள் எல்லா விஷயங்களுக்கும் எப்படி பதில் சொல்ல முடியும்? உங்கள் வீட்டு பொருளாதாரத்தை பற்றி கேட்டால் உடனே பதில் சொல்ல முடியுமா? அது போலத் தான் அரசின் செயல்பாடுகளும்.
சாதனைகள்
200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை மக்கள் வரவேற்று உள்ளனர். மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையங்கள், ஆலயங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் 717 கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. பொறுப்பேற்ற உடனேயே இவ்வளவு சாதனைகள் செய்து இருப்பது இந்தியாவில் முதல்வர் விஜயை தவிர வேறு யாரும் இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
பாஜாக்காவும் முக்கிய காரணம்.
அடுத்த கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுவது நல்லதல்ல. உங்களுக்கே ஆயிரம் பிரச்னை அதை பாருங்கள் முதலில்.....
அதிமுக வீழ்ச்சிக்குக் காரணம் சுயநலம்.இந்தக் கட்சிச் சரிய அதிமுகத் தலைவர்கள் தாங்களே தங்கள் வாயால் செயலால் உதவி புரிந்தார்கள் என்பதும் எல்லோர் பெயரும் ஒரு வகையில் இடம் பெற்று இருக்கும்.கவலையில்லை.எந்தக் கட்சிக்கும் இதில் பெயர் வரும் வாய்ப்பு இல்லை.
எடப்பாடியோடு அதிமுக இல்லை ஸ்டாலினுக்கு பிறகு திமுக இல்லை இதுதான் இன்றைய காலகட்ட அரசியல் நிலைமை.
இனி வரும் தேர்தல்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. இரு திராவிடக் கட்சிகளும் இனைந்து செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது. 25 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் திமுக, அதிமுக கூட்டணி உறுதி. அண்ணாமலை தலைமை ஏற்றால் பாஜக ஆதரவு இல்லாமலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும். ஒரு வகையில் திராவிடத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. திராவிடம் அழிவது உலகிற்கே அல்லது. செங்கோட்டையன் சொல்வதில் தவறில்லை. பாஜகவின் அறிவுரைப்படி ஒற்றுமையாக செயல்பட்டிருந்தால் இந்த நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்காது.
விஜய் மிக பெரிய அரசியல் சாணக்கியனாக இருக்கிறார். அதிமுகவை கரைக்க இவரை பயன்படுத்துகிறார். அதிமுக கரைந்தால் தவக நினைக்கும் திமுக தவக என இரு துருவ அரசியல் விளையாட்டிற்கு இன்னும் 15 ஆண்டுகள் தமிழ்நாடு அரசியல் செல்லும்.
MGR ஆல் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவை கலைப்பது மற்றும் பலம் இழக்க செய்வது தான் இந்த மௌன அரசியல் திட்டம். அதற்கு ஏற்ப சட்ட சபை நிகழ்வுகள் இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.
நீர் விஜய்க்கு தோப்புக்கரணம் போடுவதை மட்டும் செய்யும்.
அதிமுக அழிந்து கொண்டிருக்கு. திமுக குடும்ப கட்சியானாதால் மக்கள் அது வேலையாகாது என்ற நிலையய்க்கு வந்து விட்டார்கள். இன்னமும் அவர்கள் தீய எண்ணதை விட வில்லை. சிலர் தூதுவர்களாக விஜய் அவர்களை சந்தித்து தேள் கொட்டு வதை போல் விஷமான திமுகேகொள்கையை ஏற்றி கொண்டிருக்கிறார்கள். தற்போதை முதல்வரை கவிழ்க்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள். அதாவது செயல் திட்டம் எதையும் செயல் படுத்த விடாமல் முடக்கி வைக்க நேரத்தை வீணடித்து வித்தை காட்டி கொண்டிருக்கிறார்கள்.
விஜய் ஆதவ் புஸ்சி வெங்கட்ரமணன் செங்கோட்டையன் இவர்கள் சிங்கிள் தானா ?
அ.தி.மு.க வைப் பற்றி செங்கோட்டையன் கவலைப் பட வேண்டாம். வேலுமணியை தூண்டி விட்டு அ.தி.மு.கவை துண்டாட த.வெ.க தரப்பில் முழு முயற்சி எடுத்தது யார் என்று உலகிற்கே தெரியும். நல்லவர் வேடம் போட வேண்டாம் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களே!
Excellent comment
காகம் உட்கார பனங்கொட்டை விழுந்த கதைதான். செங்கோட்டையன் செய்யா விட்டாலும் அதிமுக / திமுக வரும் காலங்களில் சரிந்து விழும். த்ரவிடம் என்பது ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாகி விட்டது. அரசியலில் இளைஞர்களை ஈர்க்கும் சக்தி தமிழகத்தில் இனி இருவருக்கே. ஒருவர் மலை, அண்ணாமலை, இன்னொருவர் விசை.
எங்கோட்டையன் அம்மாவால் தூக்கி எறியப்பட்டவர்.ஜெயா இருந்த இந்நேரம் நீ காலிமகனே , எட்டப்பன் நீ தான் பழனி அல்லமேலும்
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!