10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 11ம் தேதி முதல் துவங்கி நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் எழுதினர்.
தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டது.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். மொத்தம் 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* மாணவர்கள்- 92.15 சதவீதம்
* மாணவிகள்-96.47 சதவீதம்
* தனித்தேர்வர்கள்-35.91 சதவீதம்
*சிறைவாசிகள்-95.68 சதவீதம்
வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்;
* அரசுப்பள்ளிகள்-91.86%
* அரசு உதவி பெறும் பள்ளிகள்-94.34%
*தனியார் பள்ளிகள்-98.14%
* இருபாலர் பள்ளிகள்-94.42%
* பெண்கள் பள்ளிகள்-96.42%
* ஆண்கள் பள்ளிகள்- 88.50%
டாப் 5 மாவட்டங்கள்!
1.புதுக்கோட்டை- 97.57 சதவீதம்
2.சிவகங்கை-97.54 சதவீதம்
3.தஞ்சாவூர்-97.41 சதவீதம்
4.திருச்சி-97.31 சதவீதம்
5.கன்னியாகுமரி-97.30 சதவீதம்
பாடம் வாரியாக தேர்ச்சி விகிதம்
* தமிழ் -98.43%
* ஆங்கிலம்-99.44%
* கணிதம்-97.36%
* அறிவியல்-98%
* சமூக அறிவியல்-97.93%
100/100 மார்க்!
* தமிழ்- 34 பேர்
* ஆங்கிலம்-92 பேர்
* கணிதம்-3,194 பேர்
* அறிவியல்-10476 பேர்
* சமூக அறிவியல்-3,336 பேர்
100% தேர்ச்சி!
* 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்- 5171
* 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள்- 1931
சிறைவாசிகள்
தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; தினமலர் யூடியூப், வெப்சைட் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ரிசல்ட் பார்ப்பது எப்படி?
மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பயன்படுத்தி, www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.மாணவர்கள் 78452 52525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தங்களது முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைபேசி எண்களுக்கு மெசேஜ் வழியாகவும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
கணக்கு எப்படி கூட்டி கழிச்சி பார்த்தாலும் கணக்கு சரியா வரவில்லை :
தமிழகத்தில் மொத்தம் 37,626 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன இந்தப் பள்ளிகள் அனைத்தும் பொது நிறுவனங்கள் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது இந்தப் பள்ளிகளில் மொத்தம் 52 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர் ஆனால் 52 லட்சம் மாணவர்களுக்கு வெறும் 2,25,000 ஆசிரியர்கள் மட்டுமே பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் அப்போ 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது மிகச் சிறந்தது இதன் மூலம் நூற்றுக்கு நூறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறலாம் ஆனால் இப்பொழுது தேர்ச்சி பெற்ற சதவிகிதம் சற்றும் பொருந்தவில்லை என்ன காரணம்.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் எப்படி இருக்கின்றது அனைத்து வசதிகளும் இருக்கின்றதா குறிப்பாக கழிப்பறை வசதிகள் எப்படி இருக்கின்றது குடிநீர் வசதி எப்படி இருக்கின்றது இவை அனைத்தையும் நாம்தான் ஆராய வேண்டும் அப்படி இந்த உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லை என்றால் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க சொல்லவும்.
அது மட்டுமல்லாமல் உள்ளூர் அரசு பள்ளிகளில் படித்து இன்று வெளிநாடுகளில் நல்ல நிலைமையில் உள்ள பழைய மாணவர்கள் அவர்களால் முடிந்த வரை அந்தப் பள்ளிக்கு தேவையான புதிய கட்டிடம் அல்லது சோதனை கூடம் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை நாமே செய்து கொடுத்தால் அது மிக நன்றாக இருக்கும்.
குறிப்பாக தனியார்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு எந்தவிதமான அரசு சலுகையும் கொடுக்கக் கூடாது காரணம் அவர்கள் மாணவர்களிடமிருந்து அளவுக்கு அதிகமான பணத்தை வசூல் செய்கிறார்கள் பள்ளிக்கூடம் நடத்துவது அதன் மூலம் பல மடங்கு பணத்தை சம்பாதிப்பது என்ற கோணத்துடன் தான் பள்ளிகளை நடத்துகிறார்கள் தவிர இவர்கள் ஒன்னும் ஏழை எளிய மாணவர்களுக்கு அல்லது மற்ற மாணவர்களுக்கோ ஒன்றும் சேவை செய்வது கிடையாது அவர்களுடைய நோக்கம் பணம் சம்பாதிப்பது தான்.
படித்தவர்கள் பாடம் நடத்துகிறார்கள் படிக்காதவர்கள் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள் இது எவ்வளவு கேவலமான விஷயம் என்று சிந்தித்துப் பாருங்கள் அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு 60,000 க்கு மேல் சம்பளம் ஆனால் தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு வெறும் ₹15,000 சம்பளம் ஆனால் 60,000 வாங்கும் அரசு ஆசிரியர்கள் அவர்களுடைய பிள்ளையை தனியார் பள்ளியில் வெறும் பதினையாயிரம் ரூபாய் வாங்கும் ஆசிரியர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார் இதில் என்ன லாஜிக் என்றே எனக்கு புரியவில்லை.
show me all India or specific State average of 100 percent.Then I will agree your point is correct
sankar.who are you to ask such questions. mind your own business
ஒம்பதாம்ப்பு ஃபெயில் ஆனாலும் மந்திரியாயிடலாம். ரொம்ப படிச்சா டெலிவரி பாய் வேலைதான் நிச்சயம். எதுக்கு இவ்வளவு கஷ்டப்படறாங்க?.
Ethukku ivvalavu kashtapadaraanga?
நம்ம கல்வி அமைச்சர் ஒன்பதாவது வரை மட்டுமே படித்துள்ளார் என்பதை நீங்கள் இப்படி வெளிப்படையாக சொல்லக்கூடாது..election candidate affidavit -ஐ பொருத்தவரை இவர் எட்டாவது பாஸ் plus ஆறுமாத certificate course, அவர்கள் கட்சி virtual warriors-யில் இவர் BTech- information Technology...
and what is Smriti Iranis educational qualification? and the educational qualification of deputy CM of Bihar?
sankar don't ask stupid questions
அதிக முதுகலைப் பட்டதாரிகள் உருவாகும் மாநிலம் பீகார் அல்ல. தமிழ்நாடுதான். ஆனா ஆட்சிக்கு கைநாட்டு நடிகர் போதும். மக்களுடைய ரசனை பிரமாதம்.மேலும்
-
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
-
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
-
மாநில எல்லையில் கஞ்சா விற்பனை தனிக்குழு அமைத்து தீவிர கண்காணிப்பு
-
நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள் கூடலுார் நகரில் மக்கள் அவதி
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
வேலை வாய்ப்பு முகாமில் 35 பேருக்கு நியமன ஆணை