கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் முள் மரங்கள்: அகற்ற மனமில்லாத அதிகாரிகள்
கீழக்கரை:கிழக்கு கடற்கரை பிரதான சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமித்த நிலையில் ஏராளமான சீமை கருவேல முள் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இவ்விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கையாண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம், திருப்புல்லாணி, கீழக்கரை ஏர்வாடி சிக்கல் முதல் சாயல்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்களை முறையாக நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. முக்கிய திருப்பங்கள் மற்றும் வளைவு பகுதிகளில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.
எனவே சாலையோர சீமை கருவேல மரங்களை அகற்றிடவும், ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகள், வணிக வளாகங்களில் இடையூறான பொருட்களை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடியுரிமை விதிகளில் மாற்றம்; பாகிஸ்தான் உள்பட 3 நாட்டவர்கள் பாஸ்போர்ட் விபரங்களை சமர்பிக்க உத்தரவு
-
மே23ல் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; உதயநிதி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்
-
அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் கூட்டம்; எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை
-
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்; இன்று இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சந்திப்பு
-
2029ல் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்: சீமான் திட்டவட்டம்
Advertisement
Advertisement