பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்; இன்று இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சந்திப்பு

22

நமது நிருபர்



இத்தாலிக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்திக்கிறார்.


மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலாவதாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்ற நிலையில், இரண்டாவதாக நெதர்லாந்துக்கு அவர் சென்றார். மூன்றாவது நாடாக ஐரோப்பிய நாடான ஸ்வீடனுக்கு பிரதமர் மோடி சென்றார்.

ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா - ஸ்வீடன் உறவில் ஆற்றிய பங்களிப்பு மற்றும் பிரதமர் மோடியின் தலைமை பண்பை பாராட்டி, அவருக்கு, ஸ்வீடனின் மிக உயரிய விருதான, 'ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முக்கிய ஆலோசனை



ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நார்வே சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு நார்வேயின் உயிரிய விருது வழங்கி அந்நாடு கவுரவித்தது. ஓஸ்லோவில் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.


@twitter@https://x.com/narendramodi/status/2056566281852334354?s=20twitterஇது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஓஸ்லோவில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேயுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன். ஆராய்ச்சி, கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் உள்ள துறைகளில் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இத்தாலிக்கு பயணம்



பிரதமர் மோடி 5 நாடுகளுக்கான தமது 6 நாள் பயணத்தின் இறுதிக் கட்டமாக இன்று இத்தாலி செல்கிறார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பின் பேரில் இப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement