மாவட்டத்தில் பரவலாக மழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன், வெப்பக்காற்று வீசியது. நேற்று மாலை 3 மணியளவில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் 5.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement