கார் மோதி முதியவர் பலி

ஆண்டிபட்டி, மே 21-

ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியை சேர்ந்தவர் ராஜு 70, ஆண்டிபட்டியில் டெய்லர் வேலை பார்த்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதற்காக தேனி மெயின் ரோட்டை கடந்துள்ளார். அப்போது வேகமாக சென்ற சுமோ கார் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு சின்னமனூரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் 29, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement