முதல்வர் விஜய் கேரள பயணம் ரத்து; அடுத்த வாரம் டில்லி செல்கிறார்
சென்னை: கேரள பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த முதல்வர் விஜய், தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
கேரளம் மாநிலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்., கட்சியை சேர்ந்த சதீசன், அம்மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவரது பதவி ஏற்பு விழா, திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
கேரளம், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வரும், த.வெ.க., தலைவருமான விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, இன்று காலை தனி விமானத்தில், அவர் திருவனந்தபுரம் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், கேரளா பயணத்தை, முதல்வர் விஜய் திடீரென ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் பதவியேற்ற பின், முதலில் டில்லி சென்று ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பது தான் மரபு என்பதால், கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் டில்லி செல்ல, விஜய் தயாராகி வருகிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் வெளிநாடு சென்று திரும்பிய பின் சந்திப்பு நடக்கவுள்ளது.
நல்ல முடிவு . பதவியேற்றபின்னேர் மாநில அரசு நடவடிக்கைகளில் முழு வேகம் தேவை . பக்கத்து மாநில பதவியேற்பு பங்கேற்பு இப்போதைக்கு அவசியம் இல்லை
தம்பி ராஜா காங்கிரஸ் சிறுத்தை, காம்மிஸ் , இவர்கள் பின்வங்கினால் மொத்த அதிமுக ஆதரவு தரும். 15 அமைச்சர் பதவி கொடுத்தல் போதும். அரசியல் விளையாட்டை புரிந்து கொள். இப்போதைக்கு இன்னொரு எலெக்ஷனை திருட்டு திராவிட கட்சி ரெண்டும் விரும்பாது.
அப்புறம் ஆதரவு தரும் கம்மிகள் வாபஸ் வாங்கிட்டா ஆட்சி புட்டுக்குமே ...
அதுக்குதான் எடுபுடி கட்சியிலிருந்து சில எட்டப்பன்கள் உதவுவார்களேமேலும்
-
பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி
-
அமெரிக்காவில் வான் சாகச நிகழ்வில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து
-
இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்
-
விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை இல்லை: நடிகர் ரஜினி பேட்டி
-
அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?
-
படப்பையில் 2 மாணவர்கள் வெட்டிக்கொலை: பட்டப்பகலில் நடந்த கொடூரத்தால் பீதி