அமைச்சரவையில் இடம் பெறுவதா, வேண்டாமா? குழப்பமான நிலையில் திருமாவளவன்
சென்னை: ''த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என்பது என் நிலைப்பாடு; இடம் பெற வேண்டும் என்பது கட்சியில் பெரும்பாலானோர் நிலைப்பாடு,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: காட்டுமன்னார்கோவில் தொகுதியில், நான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால், இன்றைய அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருக்குமென கூறுகின்றனர்.
திராவிட கட்சிகள் பலவீனப்படக்கூடாது என, தேர்தலுக்கு முன்பே வி.சி.க., நிலைப்பாடு எடுத்திருந்தது. எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும், அ.தி.மு.க., பாதுகாப்போடு இருக்க வேண்டும்; தி.மு.க.,வும் வலிமையோடு இருக்க வேண்டும் என சுட்டிகாட்டி வந்தோம். நாம் குறிவைத்தது போலவே, கடந்த லோக்சபா தேர்தலில், 11 சதவீத ஓட்டு பெற்ற பா.ஜ.,வின் ஓட்டு வங்கி, 2.50 சதவீதமாக குறைந்துள்ளது.
திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தி விட்டு, யார் இங்கு வரப் போகின்றனர் என்பது, முதன்மை கேள்வி. இன்றைக்கு அந்த இடத்தில் போய் நின்றிருக்கிறோம். காலப்போக்கில், த.வெ.க., - பா.ஜ., என்ற நிலை வந்து நிற்கும். அதை தடுக்க, திராவிட கட்சிகள் விழிப்புடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும்.
பதவிதான் முக்கியம் என்றால், காங்கிரசுக்கு முன்பே, த.வெ.க., அரசுக்கு, நான் கை நீட்டி இருக்க முடியும். த.வெ.க-., அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என்பது, என் நிலைப்பாடு; வேண்டும் என்பது வி.சி.க.,வில் பெரும்பாலானோரின் நிலைப்பாடு.
தீர்க்கமான முடிவை எடுக்க கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் ஆளாளுக்கு எனக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை, கக்கிக்கொண்டு இருக்கின்றனர். கட்சியில் நீண்டுள்ள விவாதமும் முற்றுப்பெறவில்லை.
அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த வினாடி வரை முடிவெடுக்கவில்லை. தான்தோன்றித்தனமாக முடிவெடுக்காமல், விவாதத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் தேவை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கோபாலபுரம் வாழ்நாள் கொத்தடிமையை அமைச்சரவையில் சேர்ப்பது மிகவும் ஆபத்தானது. இரண்டே இரண்டு தொகுதியில் வெற்றி பெற்று விட்டு முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பேராசைப்பட்ட ஆள் இவர்?. அப்புறம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
ஆட்சியில் பங்கு கோடிக்கவே கூடாது, அப்படி கொடுத்தால் ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று கூடுவோமல், உங்களது ஆட்சியையே களைக்கும் அளவிற்கு போய்விடும்.
திருமா கொள்கைவாதியா? குழப்பவாதியா?
சான்ஸ் போனால் வராது! அப்புறம் புலம்பி பயனில்லை!
திருமா கதறுவது கோடை மழைபோல் சில்லுனு இருக்கு. அடங்க மறுத்து அத்துமீறி கதறி, கதறிக்கொண்டே இரு.
5 வருஷம் இருக்கு. தெளிவா யோசிச்சு 5 ஆவது வருவும் தெரிவிக்கவும்
காட்டு மன்னார் கோவிலில் போட்டி யிட்டு இருந்தால் துணை முதல்வர் ஆகி இருக்கலாம் போல.மிரட்டலுக்கு பயந்து வேட்புமனு கூட தாக்கல் செய்யவில்லை. அப்டியே செய்து இருந்தாலும் டெபாசிட் கூட தேறாது...
ஸ்வீட் பாக்ஸ்க்கு பதிலாக பெரிய SOFA நிறைய கெடச்சும் திருப்தியில்ல. ஆதவ கிட்ட கொசுறா கொஞ்சம் கேட்டுப் பாருங்க.
அதான் சோபா செட் வந்துவிட்டதே, பிறகென்ன குழப்பம்? ஒருவேளை இன்னொரு சோபா செட்டுக்கு அடி போடுகிறாரோ?மேலும்
-
ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்: மங்கலம்பேட்டையில் பரபரப்பு
-
தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொன்றோம் ரவுடி கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்
-
22 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
-
கணவரை தாக்கியதை கண்டித்து கை குழந்தையுடன் பெண் மறியல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
-
இன்று இனிதாக (20.05.2026) செங்கல்பட்டு
-
பல நாட்களுக்கு பின் குடிநீர் குழாய் கசிவை சீரமைத்த அதிகாரிகள்