மும்மொழி திட்டத்தை தமிழகம் ஏற்கக்கூடாது
@quote@ தமிழகத்தில் சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, வாழ்வாதாரங்களை காக்கும் கடமை ஆகியவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் விஜய் ஆட்சி நடத்த வேண்டும். பி.எம்.ஸ்ரீ திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய தி.மு.க., அரசு ஏற்கவில்லை. அதே நிலைப்பாட்டை இந்த அரசும் பின்பற்ற வேண்டும்.
'நீட்' தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்ததால், 22 லட்சம் மாணவர்கள் ஏமாற்றமும், வருத்தமும் அடைந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிப்படி 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தருவது குறித்து, பட்ஜெட்டுக்கு பிறகு சொல்வதாக ஒரு அமைச்சர் கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.
- வைகோ, பொதுச்செயலர், ம.தி.மு.க.,quote
திமுக கடைபிடித்த கொள்கைகள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை கொலை கொள்ளை கற்பழிப்பு அமைச்சர்களே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு விசாரணையிருந்து தப்பித்தல் என பல செயல்கள் மக்களை வெகுவாகப் பாதித்த காரணத்தாலேயே கழகங்கள் ஒதுக்கப்பட்டன. மாநில மக்களைப் பொறுத்தவரை மாநில ஆட்சிக்கு மாநிலக் கட்சிகள் மத்தியில் ஆள அகில இந்தியக் கட்சிகள் என்பதுதான் மனநிலை எனவே மத்திய அரசு எடுக்கும் எல்லாமுடிவுகளையும் எதிர்ப்பது என்ற நாடகம் செய்யும் அளவிற்கு தவெக வலுப்பெறவில்லை எனவே மாநில உரிமைகளை இழக்காமல் உறவுகளை பேணி அடைய வேண்டிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசிடமிருந்து பெறுவதே புத்திசாலித்தனம் ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லாத தற்தலைகள் சொல்வதனைக் கேட்கவேண்டாம்
முட்டாள்தனமாக உளறுவதில் மு க கட்சி ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள் இடம் குறைவாக இருப்பதாலும், பணம் கட்டவிழ்த்து விடப்பட்டதாலுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் பல நடுத்தர, உயர் நடுத்தர வகுப்பினர் அவதிப்பட, அதனாலே உருவானதே நீட் தேர்வு. அதில் தேறினால் இடம் நிச்சயம் என்றொரு நிலை உருவானது. அதற்கேற்ற பயிற்சி தரத் தக்க அமைப்பை உருவாக்காததே மத்திய மாநில அரசுகளின் தவறு. நீட் தேர்வு தேவையில்லையென்றால் அடுத்து இதுபோல UPSC உள்ளிட்ட ஒவ்வொரு தேர்வும் தேவையில்லை என்றொரு வாதம் உருவாகும் இது சரியல்ல இதைவிட நீட் தேர்வுக்கான தரமான குறைந்த கட்டணத்தில் பயிற்சிப்பள்ளிகள் அதிகம் மருத்துவக் கல்லூரிகள் இவையே சிறந்த சிந்தனை. பொறியியற் கல்லூரி அதிகம் தேவையில்லை அவர்களால் தானாக எதனையும் செய்ய இயலாது அவர்களுக்கு வேலை தர ஒரு நிறுவனம் தேவை ஆனால் தொழிற்பயிற்சிப் பள்ளிகள் அதிகமிருந்தால் தானாக ஒரு தொழில் செய்து பிழைக்க முடியும் அது போல மருத்துவக் கல்லூரிகள் அதிகமானால் நிறைய மருத்துவர்கள் வரலாம் அரசு மருத்துவ மனைகள் மூலம் எல்லோருக்கும் மருத்துவ வசதி என்ற கனவு நினைவாகும் அதுவன்றியும் அவர்களுக்கு நிறுவன அமைப்பு இல்லாமலேயும், அவர்களே சிறு சிறு மருத்துவ ஆலோசனைக் கூடங்களை வழங்க நல்ல தொழில் வாய்ப்புக்களும் உருவாகும். திரு விஜெய் இது குறித்து சிந்திக்க வேண்டும் அதிகமான தரமான குறைந்த கட்டணத்தில் நீட் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும் நாம் தமிழர்களிடமாவது தமிழ் பேசுவோம். பிற மொழிகளைக் கற்றுக் கொண்டு தமிழின் சிறப்பை அதன் மூலம் பிற மொழியாளர்களிடம பரப்புவோம் என்று மனதில் கொண்டால்,மூன்று மொழியல்ல எத்தனை மொழியைக் கற்றாலும் அதனால் பிரச்சினையில்லை. திருத்தணி தாண்டினால் தமிழ் மட்டுமல்ல ஆங்கிலமும் பயன் தராது ஆனால் சுயநலமிக்க அரசியல்வியாதிகளுக்கு அது தெரிந்தும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்கள் அறியாமை கொண்டவர்களாக இருக்கும்வரைதான் அரசியல்வியாதிகள் ஆதிக்கம் செலுத்தும்
தமிழ்நாட்டில் அறிவற்ற மாநிலமாக உருவாக்க இந்த வைகோ போதும் திமுக எதிர்க்க எல்லா திட்டங்களையும் விஜய் எதிர்க்க வேண்டும் எதிர்பார்க்கிறார் திமுக அடிமை
He is outdated in politics. Vijay should accept the PM SHRI scheme for the benefit of government school students. They should not be deprived of learning a third language because of the dravidian parties.
போயிடு.
தமிழக மக்கள் அறிவாளிகளாக இருக்க கூடாது என்ற நல்ல எண்ணம் தான். அறிவாளியாக இருந்தால் திராவிடம் ஜெயிக்காது என்ற கவலையும் கூட? என்ன செய்வது.
எங்கு எரிகிறது? மும்மொழி வேண்டும்..... வேண்டாம் என்று சொல்ல நீ யார்?
மூன்று மொழி கற்றால் இவருக்கு என்ன பிரச்சனை.
இந்த வைகோ திருந்த மாட்டார்.
உமது குடும்பம் மட்டும் அனைத்து மொழிகள் கற்றுக்கொள்ளலாம். என்ன துரு பிடித்த அறிவுரை?.மேலும்
-
பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்
-
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் வீணாக வைக்கப்பட்டிருக்கும் சாலையோர வியாபாரிகளுக்கான உணவு விற்பனை வண்டி
-
நிழற்குடை வசதி இன்றி பயணியர் கடும் அவதி
-
ஒரகடத்தில் தேசமடைந்த சர்வீஸ் சாலை
-
சேதமான அறிவிப்பு பலகையை மாற்றியமைக்க வேண்டும்
-
உள்ளாட்சித் துறை இயக்குநருடன் நேரு எம்.எல்.ஏ., ஆலோசனை