வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு

செவ்வாப்பேட்டை: வேப்பம்பட்டு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் நகை திருடு போனது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நாராயணன், 62. இவர், கடந்த 15ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று முன்தினம் காலை வேப்பம்பட்டு வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 35 சவரன் நகை திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து, நாராயணன் அளித்த புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement