கோவில்களில் வசூல் வேட்டை; முதல்வர் விஜய் தடுக்கணும்

5


@quote@திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில், வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து வருகிறது. சுவாமி தரிசனத்திற்கு விரைவாக அழைத்து செல்வதாக கூறி, பக்தர்களிடம் சிலர் வசூல் வேட்டை நடத்துகின்றனர். இவர்களிடம், 500 முதல் 1,000 ரூபாய் கொடுத்து பக்தர்கள் ஏமாறுகின்றனர்.
தொடர்ச்சியாக இது போன்ற புகார்கள் வருவதை, கோவில் நிர்வாகம் அறியவில்லையா அல்லது அறிந்தும் கமிஷன் போய்விடும் என்று கண்டு கொள்ளாமல் இருக்கிறதா என தெரியவில்லை. சில நாட்களுக்கு முன், பக்தர்கள் கேட்டை உடைத்து, கோவிலுக்குள் நுழைந்த சம்பவமும் அரங்கேறியது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சரை நியமிக்காமல், காலம் தாழ்த்தும் முதல்வர் விஜய், விரைவில் அமைச்சரை நியமித்து, கோவில்களில் இது போன்று நடக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

- வானதி, தேசிய மகளிரணி தலைவர், பா.ஜ.,
quote

Advertisement