தொடர்ந்து கடினமாக உழைப்பேன்: ஸ்டாலின் மருமகன் 'திடீர்' அறிக்கை
சென்னை: 'மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து, தொடர்ந்து கடினமாக உழைப்பேன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகனும், 'பென்' வியூக வகுப்பு நிறுவனத்தின் நிறுவனருமான சபரீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு, 'கட்சியின் வியூக வகுப்பு நிறுவனமான 'பென்' முக்கிய காரணம்' என, கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 'பென்' நிறுவனரான சபரீசன் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் முடிவு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை, 'பென்' கவனிக்கிறது. இவற்றை பொறுப்புடனும் தெளிவுடனும் பரிசீலித்து, பாடம் கற்றுக்கொள்வது மிக முக்கியம். எங்கள் கவனம் பழி சுமத்துவதில் இல்லை; கருத்துகளை கேட்பதிலும், கற்றுக் கொள்வதிலும் தான் உள்ளது.
கட்சி பணியாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களிடமிருந்து வரும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை, ஆவலுடன் வரவேற்கிறோம். ஜனநாயகத்தில் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், பெரிய அரசியல் முடிவை, ஒரே கதைக்குள் சுருக்கி விடுவது பயனளிக்காது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்களின் தீர்ப்பை கண்ணியத்துடன் எதிர்கொள்வது எப்படி என்பதை, செயல்பாட்டால் காட்டினார். கொளத்துார் தொகுதிக்கு சென்று, மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அவரை பின்பற்றி, 'பென்' நிறுவனம், தன் குறைகளை புரிந்து கொள்ளவும், புதிய நோக்கத்துடன் வளர்ச்சி அடையவும் முன்னோக்கிச் செல்லும். மக்களின் எதிர்பார்ப்புகளை ஆழமாக புரிந்து கொண்டு, தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இனி ஒரு பப்பும் வேகாது. கொஞ்சமா ஆட்டம் ஆடுனிங்க. நல்லா அனுபவிங்கடா.
ஸ்டாலின் குடும்ப சொத்துக்கள்.. முன்னாள் மந்திரிகள் சொத்துக்களை அரசுடமை ஆக்கி தமிழக அரசின் கடனை அடைக்க வேண்டும்....
பக்தவச்சலம் அண்ணாதுரை lக்கு அடுத்ததாக நெடுஞ்செழியன் ன்னு தொடர்ந்து மாநிலமே ஒரே சாதியின் ஆதிக்கத்திற்கு சென்றுவிடாமல் தடுக்க தன்னை ஆதரிக்க வேண்டும்னு கட்சியினரை மனம் மாற்றி இழுத்தார் கருணாநிதி. இப்போ கட்சியும் குடும்பமும் அதே சமுதாய வம்சத்தின் கையில். நடக்கட்டும் நடக்கட்டும்.
சம்பாதித்தை காப்பாற்ற உழைப்பு முக்கியம்
குட்டி சாரின் இந்த அறிவிப்புக்கும் ஆமையாரின் இந்த முடிவுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சங்கிகள் மட்டுமே பேசிக்கிறாங்க .... [2029ல் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்: சீமான் திட்டவட்டம்]
அதிகாரம் போனபின் இந்த புத்தி வந்தா என்ன ... வராட்டா என்ன.
புரியுது தம்பி, போன 5 வருஷம், வருசத்துக்கு 30,000 கோடி உங்க உழைப்பால் உங்களுக்கு கிடைச்சதுன்னு ஒருத்தர் சொன்னார். இப்போ இன்னும் கடுமையா உழைப்பேன் அப்படின்னு சொல்றீங்க. ஆனா இப்போ உங்க மாமனார் ஆட்சி இல்லையே தம்பி. ஒரு மைனாரிட்டி அரசு, உங்க எதிரிகள் அவங்களுக்கு ஆதரவு கொடுக்குறாங்க. மத்திய அரசு உங்க பைலை தூக்க நெறைய சான்ஸ். முன்னே Z பாதுகாப்பு மாதிரி மாமனார் எல்லாத்தையும் பாத்துக்கிட்டார். இப்போ அவருக்கே பாதுகாப்பு இல்ல, கஷ்டம்தான்.
நான்காவது பத்தி, நான்காவது வரி, ஜனநாயகத்தில் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றால் எதற்காக சமூக ஊடகவியலாளர்களை கொடுமைப்படுத்தி கையை உடைத்து வீட்டிலிருப்போரை காயப்படுத்தி, மனிதக்கழிவுகளை அவர்கள் வீட்டில் தெளித்து சிறையிலடைத்து சித்தரவதை செய்தீர்கள்? அவசரகால அடக்குமுறையையும் விட பன்மடங்கு கொடுமைப்படுத்தினீர்கள். பெரிய பேச்சு பேச வந்துவிட்டார்கள்.
முதல்ல ஜிப் கவர் நிறுவனத்தில் இருந்து நில அபகரிப்பை தடுத்து மக்களுடைய வாங்கும் திறனுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்து ஒழுங்கான முறையில் வியாபாரத்தை செய்யுங்கள் முதலில் நீங்கள் அரசியல் செய்வது விடுங்கள் அப்போதுதான் திமுகவிற்கு விரைவு காலம் பிறக்கும்
ஆமாம் இனி நாலு கோடி வாட்ச்சுக்கு பதில் நாற்பது கோடி வாட்ச் அணிவேன்.மேலும்
-
குடியுரிமை விதிகளில் மாற்றம்; பாகிஸ்தான் உள்பட 3 நாட்டவர்கள் பாஸ்போர்ட் விபரங்களை சமர்பிக்க உத்தரவு
-
மே23ல் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; உதயநிதி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்
-
அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் கூட்டம்; எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை
-
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்; இன்று இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சந்திப்பு
-
2029ல் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்: சீமான் திட்டவட்டம்