கலிபோர்னியாவில் 3 பேர் சுட்டுக்கொலை; தாக்குதல் நடத்திய இருவர் தற்கொலை

14

சான் டியாகோ: கலிபோர்னியாவில் உள்ள பிரபல மசூதியில் இரு வாலிபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் சான் டியாகோவிலுள்ள பிரபலமான மசூதியில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரித்ததில், மசூதியின் காவலாளி உள்பட 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய இரு வாலிபர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மெக்ஸிகோ எல்லைக்கு அருகிலுள்ள மிகப்பெரிய மசூதியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினர்.

இது குறித்து சான் டியாகோ போலீசார் கூறுகையில், "பெண் ஒருவர் தனது மகனை காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். அதோடு, தன்னுடைய ஆயுதங்களையும், காரையும் காணவில்லை என்று கூறியிருந்தார். இந்த சூழலில், துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் புகார் அளித்த பெண்ணின் மகன் ஆவார்," என்றனர்.

Advertisement