அமைச்சுப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

கடலுார்: சென்னை ஆயுதப்படை அலுவலகத்தில் இளநிலை உதவியாளரை பெண் டி.ஐ.ஜி., தாக்கியதைக் கண்டித்து, கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

சென்னையில் தமிழக போலீஸ் ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவரை, பெண் டி.ஐ.ஜி.,தாக்கியதைக் கண்டித்தும், இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக போலீஸ் அமைச்சுப்பணியாளர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணி செய்தனர். கடலுாரில் மாவட்ட போலீஸ் அமைச்சுப்பணியாளர் சங்க தலைவர் தமிழ்வாணன், துணைத்தலைவர் முருகன், செயலாளர் இளையராஜா முன்னிலையில் 70க்கும் மேற்பட்டோர் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement