முதல்வர் விஜய் போட்டோ வைக்க மறுப்பு; அடம் பிடிக்கிறார் கோவை தி.மு.க., மேயர்
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தன் அறையில், முதல்வர் விஜய் போட்டோவை வைக்க மறுப்பு தெரிவித்து, கோவை தி.மு.க., பெண் மேயர் அடம் பிடிப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில், அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் முதல்வர் விஜய் போட்டோ வைப்பதற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்து, செய்தி - மக்கள் தொடர்பு துறையால், முதல்வர் விஜய் போட்டோ அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில், கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கூட்டரங்குகளில் விஜயின் புகைப்படம் மாட்டப்பட்டது.
மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், மண்டல தலைவர்களுக்கு மாநகராட்சி அலுவலகத்திற்குள் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். துணை மேயர் வெற்றிச்செல்வன் தன் அறையில், முதல்வர் விஜய் புகைப்படம் வைப்பதற்கு, எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.
ஆனால், மேயர் ரங்கநாயகி, அவரது அறையில் முதல்வர் படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்வரை அவமானப்படுத்தும் வகையில், மேயரின் உதவியாளர் விஜயகுமார் இருக்கைக்கு மேல், சிறிய படம் தொங்க விடப்பட்டது.
அதே நேரம், மேயர் அறைக்குள் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள் நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் படங்கள் உள்ளன.
மேயர் ரங்கநாயகியிடம் கேட்டதற்கு, ''எனக்கு ஒதுக்கிய அறையில், எங்கள் கட்சி தலைவர்கள் படங்களை எடுக்க முடியாது. அவர்களை பார்த்தால், புத்துணர்ச்சி கிடைக்கும்.
''முதல்வரின் புகைப்படத்தை, அறைக்கு முன் வைத்திருக்கிறோம். 2027 ஜன., வரை எனக்கு பதவி காலம் இருக்கிறது. அதுவரை என் அறைக்குள் முதல்வர் விஜய் படம் வைக்க மாட்டேன்,'' என்றார்.
இதேபோல், மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்களின் அறைகளிலும், முதல்வர் விஜய் புகைப்படங்களை வைக்க, ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் விஜய் போட்டோவை வைக்கவும்.
அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் மாட்டும் தமிழகத்தில்தான் உள்ளது.இதற்கான படச்(தண்ட)செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சிகள்தான் ஏற்கணும்.
நிரந்தரமாக மகாத்மா காந்தி, தேசிய சின்னம் படம் மட்டுமே இந்திய நீதித்துறை அரசு நிறுவனங்களில் இடம் பெறவேண்டும்.
முதலில் சட்டத்தை திருத்தி அந்த அந்த மாநில அரசு சின்னம் / மகாத்மா காந்தி போட்டோவை வைக்கலாம்.
இது என்ன சட்டமா ஆளுங்கட்சி புகைப்படத்தை வைக்க வைக்க வேண்டும் என்று. படத்தை வைத்து தான் விஜயை தெரிந்து கொள்ள வேண்டுமா அல்லது ஸ்டாலினை தெரிந்து கொள்ள வேண்டுமா. ஆளுங்கட்சி முதல்வர்களின் படங்களுக்கு பதிலாக அரசு அலுவலகங்களில வாஊ சிதம்பரனார் போன்ற தியாகிகளின் படங்களை மாட்டுங்கள்.
திமுக ஆட்சி காலம், தேர்தல் தோல்வி காரணமாக முடிவுக்கு வந்து விட்டது. எனவே திமுக வின் தயவில் பதவிக்கு வந்த அனைவரும் உடனடியாக பதவி விலகுவதே முறை.
மகாத்மா காந்தி போட்டோ வைங்க
கேட்பாரின்றி பங்குபோட்டு கொள்ளை அடித்து கொண்டிருந்தனர். திடீர் என அதற்கு தடை வந்தால் என்ன செய்ய. விஜய் போட்டோ பார்த்தவுடன் அனைத்து உறுப்பும் திகுதிகுவென எரியும். கோபம் வரத்தானே செய்யும்.
மக்களுக்கு வேலை செய்யாதீங்க. இது தான் திராவிட மாலின் 75 ஆண்டு வரலாறு. மாடலுக்கும், ரீல்ஸ் கூட்டங்களுக்கும் சண்டை. கோயம்பத்தூரே வேடிக்கை பார்க்குது.
விஜய் போட்டோவையும் வைக்க வேண்டாம், அஜீத் போட்டோவையும் வைக்க வேண்டாம். முதல் அமைச்சர் யாராக இருந்தாலும் அவர்களது படத்தை வைங்கப்பா.
ஏட்டிக்கு போட்டியா பேசிக்கிட்டு நாட்டை குட்டிச்சுவரா ஆக்கிடாதிங்கப்பா.
சென்ற ஆட்சியில் இப்படி செய்திருந்தால் இப்படியான மயிலிறகால் வருடி கொடுக்கும் காமன்டுகள் வந்திருக்குமா ??? மரபை மீறுவது என்பது திமுகவிற்கு கைவந்த கலைமேலும்
-
திருவாதவூரில் கொடியேற்றம்
-
நமச்சிவாயம் டில்லியில் முகாம்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
-
புளு ஸ்டார் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
-
திறந்தவெளி பள்ளியில் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
-
குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வுதந்த கோடை மழை * தொட்டிகளை சுத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு