குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதியில் அதிநவீன குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை அழகு (எ)அழகானந்தம் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.

பொதுப்பணித்துறை மூலம், கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட தட்சிணாமூர்த்தி நகர் முதல் வழுதாவூர் சாலை பெருமாள் கோவில் வரை 750 மீட்டருக்கு புதிய சிமென்ட் பூச்சினால் ஆன அதிநவீன இரும்பு குழாய் அமைக்கப்படுகிறது. 4 அங்குலம் அளவில் அமைக்கப்படும் புதிய குடிநீர் குழாய் மூலம் 60 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பும் வழங்கப்படுகிறது.

இப்பணியினை அழகானந்தம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு செயற்பொறியாளர் சுந்தரி, உதவி பொறியாளர் சங்கர், இளநிலை பொறியாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement