திருவாதவூரில் கொடியேற்றம்

மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றப்பட்டது. சுவாமிகள் முன்பு கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்து கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியாக பஞ்ச மூர்த்திகளுடன் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் மே 25-ல் மேலுாரில் எழுந்தருள்கின்றனர். மே 28ல் திருக்கல்யாணம், 29 ல் தேரோட்டம், 30 ல் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

ஏற்பாடுகளை இணை கமிஷனர் சுரேஷ், உதவிகமிஷனர் லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.

Advertisement