வீட்டில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்; சர்ச்சையில் தவெக பெண் எம்எல்ஏ
கோவை: கவுண்டம்பாளையம் த.வெ.க., எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் அதிகாரிகளை வீட்டுக்கு வரவழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் த.வெ.க., எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ். இவர் தனது சமூக வலைதளத்தில், கவுண்டம்பாளையம் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து, துாய்மை பணிகளை தீவிரப்படுத்துவது, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, நிர்வாக நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தினேன் என, குறிப்பிட்டு இருந்தார்.அரசு அதிகாரிகளை எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ், வீட்டுக்கு அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது.
கூட்டத்தில், அதிகாரிகளை பிளாஸ்டிக் சேர்களில் அமர வைத்துவிட்டு, எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ், சோபாவில் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து சமூக வலை தளங்களில் எம்.எல்.ஏ., கனிமொழியை விமர்சனம் செய்து பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
இது குறித்து எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் மற்றும் அவருடைய கணவர் சந்தோஷ் குமார் ஆகியோரை தொடர்பு கொண்ட போது, அவர்களுடைய மொபைல் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ், தனது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், துடியலுாரில் உள்ள கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அலுவலகம் இன்னும் தயாராகவில்லை.
இதனால் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள என்னுடைய ஜோதிட அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து வருகிறேன். அதிகாரிகளை டீசன்ட்டான சேர்களில் அமர வைத்து தான் பேசினேன். யாரையும் வரவழைத்து நான் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. முதல்வர் விஜய் பெயருக்கு களங்கம் விளைவிக்கவில்லை என, வீடியோ வடிவில் பதிவிட்டிருந்தார்.
உங்கள் காலம் ஆடுங்கள் ஆட்டத்தை நிறுத்தி வைப்பான் இறைவன். ஒரு பாட்டு யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே
அவர்களுக்காக புது சோபா வாங்கி போட வேண்டுமா? பிளாஸ்டிக் சேரில் அமர வைத்தால் என்ன தப்பு? அரசு அலுவகங்களில் பொதுமக்களையும், கீழ் மட்ட அலுவலர்களையும் அமரவைத்துதான் பேசுகிறார்களா?
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை பிடிப்பான் என்பது இதுதானோ?
தலைவனை போல் தொண்டன் சாரி தொண்டி. தலைவருக்கு எல்லாம் பனையூர்ல வேண்டியிருக்குதல்லவா அதுபோலத்தான்
Stop your logic
ஏன் திமுக எம்எல்ஏ க்கள் மட்டுமே செய்ய வேண்டுமா, வேற கட்சியினர் செய்ய கூடாதா. என்னங்கடா நியாயம்.
திமுக நொன்னைங்க செஞ்சதனால தான தற்குறிங்க சேர்ந்து தற்குறிங்கள தேர்ந்தெடுத்திருக்கானுங்க? நீயும் அதையே செஞ்சீன்னா விசிலுக்கு குடியவிரைவில் சங்கு நிச்சயம்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்த ராத்திரியேலெ குடை பிடிப்பான். கூமுட்டை. இந்த பாவையால் சேவை செய்யமுடியாது.
ஏதாவது ஒரு அரசு அலுவலகத்தில் ஓர் அறையிலோ அல்லது கூட்ட அறையிலோ நடத்தி இருக்கலாம். தனக்கு சொந்தமான இடத்தில் நடத்தியது அதிகார வெறியே. இந்த அரசேஅலுவலர் மாற்றம் தவிர எந்த வேலையையும் முழுமையாக துவக்கவில்லை. இவருக்கு மட்டும் ஏன் முந்திரிக்கொட்டை தனம்?
ஒரு ஜோதிடருக்கு இவ்வளவு பெரிய அலங்கார வீடு இருக்குமா.. ?. சிஎம் ஒரு ஜோதிடரை ஆலோசகராக நியமிக்கிறார். .நாடு உறுபட்டார் போல் தான். 50 கலீல் தமிழ் நாடு rational thinking புரட்சி செய்து சமூகத்தை கீழ் நோக்கி இழுக்கும் சக்திகளை கலைந்தது. இப்போ மறுபடியும் தமிழ் சமூகம் தடம் மாறுகிறது. ..
இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை
இது ஒரு அறிமுகம் கூட்டமாக இருக்கலாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் ஒருவர் தேவைகளை தெரிந்து கொள்ளவும் இது உதவி செய்திருக்கும்
இதனால் பலன் பெறப்போவது அந்த தொகுதி என்றால் என்ன பிராப்ளம்
எடுத்தாலும் தொட்டாலும் குற்றமாக பார்க்கும் நிலையை மாற்ற வேண்டும் அவர்களுக்கு டைம் கொடுக்க வேண்டும் அதில் முன்னேற்றம் ஏற்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள மனம் வேண்டும்
குற்றம் சொல்வதையே குணமாக கொண்ட தமிழ் இனத்தில் யார் என்ன செய்தாலும் அது தவறாகத்தான் தெரிகிறது
ஒட்டடை குச்சிக்கு புடவை சுத்திவிட்டாலே இவர்கள் மரியாதை செலுத்துவார்கள் .. நியோமராலஜி அம்மு அறிமுக கூட்டம் நடத்தினால் சேர் இல்லாவிட்டாலும் பரவாயில்லைமேலும்
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!