இத்தாலியில் பிரதமர் மெலோனியுடன் கொலோசியம் சென்றார் மோடி
ரோம்: இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமருடன் ஒரே காரில் பயணித்து வரலாற்றுப் புகழ் பெற்ற கொலோசியம் அரங்கை பார்வையிட்டார்.
மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். வெளிநாட்டு பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலிக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு ரோம் நகரில் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இத்தாலி நாட்டின் துணை பிரதமர் அண்டோனியோ தஜானி நேரில் சென்று வரவேற்றார்.
வாய்ப்பு கிடைத்தது
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ரோமில் தரையிறங்கியதும், பிரதமர் மெலோனியை இரவு உணவின்போது சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க Colosseumக்கும் நான் வருகை தந்தேன். இந்தியா-இத்தாலி நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நன்றி
ரோம் நகரில் எனக்கு அளித்த அன்பான வரவேற்பிற்காக, இத்தாலியில் வாழும் இந்தியச் சமூகத்தினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அவர் ''இந்தியா-இத்தாலி உறவுகளை வலுப்படுத்துவதில் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. உலகெங்கிலும் வாழும் இந்தியப் புலம்பெயர் சமூகம், தொடர்ந்து நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறது'', என தெரிவித்தார். .
@block_P@
இத்தாலியில் இந்திய இசை மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ரோம் நகரில் நடைபெற்ற சமூக வரவேற்பு நிகழ்ச்சியின்போது, ஐந்து இத்தாலியக் கலைஞர்கள் இசை நிகழ்த்தியதற்கு பாராட்டுகள் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
block_P

@block_G@
இத்தாலிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியோ மெலோனி உற்சாக பதிவு ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, ''எனது நண்பரை ரோம் நகருக்கு வரவேற்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.block_G
திரு மோடி அவர்களின் தலைமையில் உலக அளவில் இந்தியாவிற்கு கிடைத்த அங்கீகாரத்தையும் நாட்டின் திறமான வேகமான வளர்ச்சியையும் சகித்துக் கொள்ள முடியாத தேச விரோத கும்பல்களின் வயிறு எரியத்தான் செய்யும் ஆனாலும் திரு மோடி அவர்களின் கண்ணியமான தலைமையில் இவர்களுடைய வயிற்றெரிச்சலும் இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கு தேவையான உந்து சக்தியாக எரிசக்தியாக மாற்றியமைக்கப்படும்
நாட்டில் பெட்ரோல் டீசல் விலையேற்றம், விலைவாசி உயர்வு, கியாஸ் தட்டுப்பாடு, பொருளாதார வீழ்ச்சி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பிழப்பு இவற்றுக்கு மத்தியில்...
நண்பர் திரு கே.டி. ராகவன் அவர்களே வக்கிர எண்ணம் கொண்ட நபர்களை நமது மலர் பார்த்துகொள்ளும் .நாம் மலருக்கு நன்றி உரைப்போம்.
இப்போது நாடுகளுக்கு இடையில் உள்ள உறவு இரு நாடுகளின் தலைவர்களின் உறவை பொறுத்ததாக அமைகிறது. இரு நாட்டு வியாபாரம், அங்கு சென்று வேலை செய்யும் வாய்ப்புகள் இந்த உறவுகளை பொறுத்தே அமைகிறது. இந்த உறவுகள் தான் இந்திய ஐரோப்பா உறவுகளை மிக உச்சத்தில் கொண்டு வைத்து உள்ளது. பாராட்டுக்கள்.
32 வது பதக்கத்தோடு 33 வது பதக்கம் இத்தாலியில் இருந்து கன்பார்ம்.
விவேக் என்பவரின் எழுத்து எல்லை தாண்டி போகிறது.
ஆம் சகோதரா எந்த கேள்விக்கும் ஆக்கபூர்வமான ஆதாரம் பூர்வமாக பதில் வராது பதில் அளிக்க தெரியாது . வாங்கிய காசுக்கு மேல் கூவும் கூட்டம்
நமது மோடிக்கு இத்தாலி என்றாலே தனி பாசம். தனி அன்பு .... அதனால் தான் ஏழாவது முறையாக அந்த நாட்டு தலைவரை சந்தித்து மனம்குளிர்கிறார் . இதற்கு முன்னர் பிரெஞ்சு அதிபரை ரஃபேல் போர் விமான பேச்சுவார்த்தைகள் போது ஏழுக்கும் அதிகமான முறை சந்தித்து இப்போது பல வழக்குகளில் சிக்கி இருக்கும் அணில் அம்பானிக்கு ஒப்பந்தம் கிடைக்க வழிவகை செய்தார். அப்புறம் ரஷிய அதிபர் புடினை ஏழுக்கும் அதிகமான முறை சந்தித்து முகேஷ் அம்பானி குடும்பம் ரஷியாவில் இருந்து கச்சா கம்மி விலையில் வாங்க ஏற்பாடு செய்தார் ... நமக்கு இனி மேல் தான் இத்தாலியில் இருந்து என்ன புது ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெரியவரும். உலக அளவிலான பெண் தலைவர்களில் இத்தாலி அதிபர் மட்டும் தான் மோடியை ஏழுமுறை சந்திக்கும் பாக்கியம் பெற்றவர்.
பிரகாஷ்ராஜ் மாதிரி வெறுப்பை, வக்கிரத்தை பரப்பாதீர்கள்.
பெற்றோர்கள் வைத்த பெயர்தான் கேடி ராகவன் என்பது....
நான் கூறிய கருத்தில் இருப்பவை எல்லாம் வரலாறு ... உண்மை தகவல்கள் . ரீல்ஸ் அல்ல ... வக்கிரம் அல்ல ... பொய்யும் அல்ல ... மிகுந்த கண்ணியத்துடன் எந்த ஆபாசமும் இல்லாமல் எழுதப்பட்ட கருத்து . பார்க்கும் பார்வையில் இருக்கும் கோளாறோ அல்லது உண்மையோ அது அவரவர் பார்வையில் உள்ளது .ஆனால் எப்போதும் உண்மை சுடும் ....என் மகன் குறித்து அறிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வத்தை உண்மையை அறிந்துக்கொள்வதிலும் காட்டுங்கள். எழுதியவை உண்மைக்கு மாறானது என்று நீங்கள் நிரூபிப்பதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
இருநூறு ஓவாவுக்காககு கதறும் ஊப்பீ இன்னும் ஐந்து வருசத்துக்கு கதறிட்டே தான் இருக்கனும் இந்துமத ஜென்ம விரோதிக்கு அடித்த ஆப்பு ஜென்மத்துக்கும் மறக்க மாட்டான்
ராகவன் தான் இவ்வளவுதான் என்பதை நிரூபித்து விட்டார்
ரஷ்யாவிடமிருந்து கம்மி விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது அம்பானி மட்டுமல்ல, ருஷ்யாவின் நயாரா மற்றும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசு கம்பெனிகளும் வாங்கின. இதிலென்ன தவறு. இதனால் நமக்கு பெட்ரோல் தடையின்றி ஒரே விலைக்கே இவ்வளவு நாட்களும் கிடைத்தது. அம்பானியின் நிறுவனம் அதை சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கே விற்று அமெரிக்காவின் தடையை நிராகரித்தது. ராகவன் ன்று புனைப்பெயரை வைத்துக்கொண்டிருக்கும் அறிவாலய அடிமைக்கு இது எங்கே உரைக்கும்?
"இந்தியா-இத்தாலி இடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தாண்டி, Talent Exchange எனப்படும் மனிதவளப் பரிமாற்ற ஒப்பந்தங்களும் மிக முக்கியம். ஐரோப்பிய நாடுகளில் இந்திய இளைஞர்களுக்கான முறையான வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு இந்த மாநாட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டால், அது நம் நாட்டுத் திறமையாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்."
"உலகளவில் அதிகம் பேசப்படும் ஒரு இராஜதந்திர நட்பு இத்தாலி-இந்தியா நாடுகளுக்கு இடையே உள்ளது. இத்தாலி பிரதமர் மெலோனி அவர்கள் Welcome to Rome, my friend என்று பதிவிட்டிருப்பது இரு நாடுகளின் நெருக்கமான உறவைக் காட்டுகிறது. இந்த உறவு வெறும் புகைப்படங்களோடு நின்றுவிடாமல், இரு நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முழுமையாக உதவ வேண்டும்."
"பிரதமர் மோடி அவர்களின் இந்த இத்தாலி பயணம் வெறும் நட்பு ரீதியானது மட்டுமல்ல, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு IMEC மிக முக்கியமானது. உலக நாடுகள் இன்று இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன என்பதற்கு இத்தாலியில் கிடைத்துள்ள இந்த உற்சாக வரவேற்பே சாட்சி. உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர் மேலும் உயரட்டும்"