மருந்து கடைகள் மூடல்  

பண்ருட்டி: ஆன்லைன் மருந்தகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகள் நேற்று முடப்பட்டன.

பண்ருட்டியில், ஆன்லைன்  மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி மருந்து வணிகர் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு  போராட்டம் நடந்தது.

இதையொட்டி, பண்ருட்டி ராஜாஜிசாலை, காந்திரோடு , கும்பகோணம் சாலை, இந்திரா காந்தி சாலை கடலுார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  மருந்து கடைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்.

Advertisement