வாலாஜாபாதில் நுாலகத்திற்கு சொந்த கட்டடம் தேவை ம.தி.மு.க., செயலர் மனு

காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் நுாலகத்திற்கு சொந்த கட்டடம் தேவை என, ம.தி.மு.க., செயலர், காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி ம.தி.மு.க., செயலர் சிவகுமார் அளித்துள்ள மனுவில் கூறியதாவது:

வாலாஜாபாத் பேரூராட்சியில், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர். கல்வி அறிவு மேம்படுத்துவதற்கு, தனி நுாலகம் இயங்கி வந்தது.

அந்த கட்டடம் பழுது ஏற்பட்டு, தற்காலிகமாக அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக கட்டடத்தில் இயங்கி வருகிறது. பள்ளி வேலை நாட்களில், நுாலகத்திற்கு செல்வதில் தயக்கம் நிலவி வருகிறது.

எனவே, வாலாஜாபாத் நுாலகத்திற்கு சொந்த கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement