ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாயமானதாக போலீசில் புகார்
ஷிவமொக்கா: ஒரு குடும்பத்தை சேர்ந்த, நான்கு பேர் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஷிவமொக்கா புத்தாநகரை சேர்ந்தவர்கள் முகமது பைசல், 35, நர்ஷத் பானு, 54, முகமது ஆதில், 32, முகமது இக்பால், 62. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள், கடந்த மாதம், 15ம் தேதி வெளியூர் செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றனர்.
வீட்டை விட்டு சென்று பல நாட்கள் கடந்தும், இவர்கள் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவர்களை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து, அவர்களது உறவினர் ஒருவர், தொட்டப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடும் பணியை துவங்கி உள்ளனர்.
குடும்பத்திற்கு கடன் தொல்லை ஏதாவது இருக்கிறதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
-
தாம்பரம்-போடி சிறப்பு ரயில்
-
தலைமை பொறியாளர் 'சஸ்பெண்ட்'