பெண்ணிடம் சீண்டிய டாக்டர் கைது

திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம் அத்துமீறிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த 19 வயது பெண். திருமணமாகி ஓராண்டாகியும், குழந்தை இல்லை. சின்னநாகப்பூண்டியில் உள்ள ஆயுர்வேத டாக்டர் பாஸ்கர் 52, என்பவரிடம் கடந்த வாரம் சிகிச்சைக்கு சென்றார்.

அப்போது அப்பெண்ணிடம் டாக்டர் பாஸ்கர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்படி திருத்தணி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, டாக்டர் பாஸ்கரை நேற்று கைது செய்தனர்.

Advertisement