பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு; குவியும் கண்டனங்கள்
நமது சிறப்பு நிருபர்
பெண்களை இழிவுபடுத்தி திமுக எம்பி ஆ.ராஜா சர்ச்சை பதிவு வெளியிட்டதற்கு பல்வேறு கட்சி கண்டனங்கள் தெரிவித்து வருகிறன்றனர். அதன் விபரம்;
பாஜ கண்டனம்
தமிழக பாஜ துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விடுதலை சிறுத்தைகளையும், முஸ்லீம் லீக்கையும் விமர்சித்து விட்டு பின்னர் அதை நீக்கிய ஆ.ராசாவை, இதே கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், வேறு யாராவது இதே வார்தைகளை கூறியிருந்தால் என்ன சொல்லியிருப்பார்?
"ஐயோ! கேட்பாரற்று போய் விட்டதா தமிழகம்? ஒரு தலித் என்றும் பாராமல், சிறுபான்மை சமுதாயத்தை எண்ணி பார்க்காமல் இப்படி வசை பாடலாமா?" என்று வசனம் பேசியிருப்பாரே, திருமாவளவன் வானத்திற்கும், பூமிக்கும் குதித்திருப்பாரே? எங்கே? காணோமே? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி
அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்; ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே.அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்.
மார்க்சிஸ்ட் பார்லி குழு தலைவர் வாசுகி
தேர்தல் கூட்டணி, பிரச்னைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? அதிலும் கூட விவாகரத்து உண்டு.. பூ முடித்தவரை புறம் தள்ளி என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று?
அமைச்சர் ஆதவ்
திமுக தலைவரும், உதயநிதியும் தேர்தல் தோல்வியில் ஏன் தோற்றோம் என்று இன்னமும் தெரியவில்லை. அரசியலில் ஒரு கட்சியையும், ஒரு தலைவரையும் தாக்கும் போது, ஒரு பெண்ணுடைய உறவை அடிப்படையாக வைத்து விமர்சனத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். அப்படி, ஆ.ராஜா வாயில் சொல்ல முடியாத அளவிற்கு, தலித் சகோதரர்கள் மட்டுமத்த ஒட்டுமொத்த தலைவர்களும் மதிக்கக்கூடிய திருமாவளவனை பார்த்து, ஒரு பதிவை போட்டுள்ளார்.
அந்த வார்த்தையை சொல்வதற்கே தயக்கமாக இருக்கிறது. அந்த வார்த்தைகளை திருமாவளவன், விசிக மீதும் பதிவு செய்தததை கண்டிக்கிறேன். எதிர்க்கட்சி அரசியலை வரவேற்கிறோம். ஆனால், தனிநபர் விமர்சனத்தையோ, ஒரு கட்சியின் தொண்டர்களையோ, ஒரு பெண்ணின் உறவை மையப்படுத்தி பேசுவது, இது அண்ணா, ஈவேரா கற்றுக் கொடுத்தது கிடையாது. திமுகவுக்கு கடமையும், கண்ணியம்,கட்டுப்பாடு கிடையாது. அதனால் தான் இந்த மாதிரி பதிவு பண்ணுகிறார். இதற்கு ஸ்டாலினின் விளக்கம் என்ன. இது மக்களின் தீர்ப்பு, திமுக எதிர்க்கட்சியாக செயல்படும் போது, அதனை அரவணைக்கிறோம்.
எதிரி அரசியல் செய்யாமல், ஸ்டாலினை முதல்வர் வீட்டுக்கே சென்று சந்தித்தார். இந்த ஜனநாயகப் பண்பு புதிதாக தோன்றிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கிறது. ஆனால், 75 ஆண்டு கால பாரம்பரியம் என்று சொல்லக்கூடிய திமுகவுக்கு இல்லை. ஆ.ராசா திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக எம்பி கனிமொழி எப்போதும் குரல் கொடுப்பார்கள். திமுகவில் தன்னுடைய சக கட்சி நிர்வாகியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இது போன்று சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து அவதூறு பேசினால், நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இவனை ஒரு 6 மாதங்களுக்கு இருட்டறையில் அடைத்து வைத்தால் இவனுடைய கொழுப்பெல்லாம் கரையும்.
காங்கிரசுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களது காலை வாரிவிட்ட மகான் இவரை மறக்க முடியுமா இவர் செய்த ஊழல் உலகிலேயே இனி யாருமே செய்ய முடியாதது அதற்கு வேறு டூ.ஜி. ஊழல் மன்னன் என்றே இவருக்குபெயர் இனியும் இவர் இதுபோன்று பேசினால் தலித் மக்களே கொந்தளித்தெழுந்து திருமாவிற்கு ஏற்பட்ட அவமானத்தை புறக்கணிக்க வேண்டும்
திமுக-பாஜக உறவு இனி சந்திக்கு வரும் ......
அ ராசாவிற்கு நாகரீகமாகப் பதில் சொல்வதென்றால்: "குலவித்தை கல்லாமல் பாகம் படும்"
எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரையும் இழிவாகப் பேசியுள்ளார் ..... அமித் ஷா குறித்தும் பேசியுள்ளார் ....
இந்த ராஜாவுக்கு சிறந்த தண்டனை, அந்த 2G ஊழல் வழக்கை மீண்டும் ஆரம்பித்து, வழக்கை துரிதகதியில் முடித்து, திஹார் சிறையில் தள்ளவேண்டும். இல்லையென்றால் இந்த ராஜா மேலும் பல சர்ச்சைக்குரிய கவிதைகளை பேசுவார்.
இங்கே எவரோ இரும்புக் கரம் அப்டின்னு சுத்திக்கிட்டு இருந்தார்...இதே ஜெயலலிதா அம்மையார் இருந்தால் எவ்வித விசாரணை இன்றி பதவியில் இருந்து தூக்கி கைது செய்து இருப்பார். ஆனால் தற்போது...
விடுதலை சிறுத்தைகள் கேட்க ஆரம்பித்தாள் ராசா என்ன சொல்வார் ?
இவன் எப்பொழுதுமே பெண்களையும், ஜாதிகளையும் பற்றி தரைகுறைவாக விமர்ச்சனங்கள் செய்தாலும் கைது செய்து உள்ளே தள்ள யாராலும் முடியவில்லை ஏன்? ஒரு முறையாவது உள்ளே தள்ளி ஆறு மாத காலம் வைத்தால் பேசுவானா. திமுக காரன் என்ன செய்தாலும் கைது செய்யாதது ஏன்?
இந்து பெண்களை வே...... என்ற போதே பிடித்து உள்ளே தள்ளி இருக்க வேண்டும்.. வக்கிரம் , வன்மம் , பெண்களை பற்றிய இழிவான சிந்தனை.. தலித்களை கிள்ளு கீரையாக நினைத்து வார்த்தைகள்...
அவரே தலித் தான் .....மேலும்
-
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
-
25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
-
சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்
-
வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்