பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
புதுடில்லி: பெரிய நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வழங்கும் போது அலட்சியமாக செயல்படும் வங்கிகள், சாமானியர்கள் சிறிய கடன்களை பெற முயன்றால் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் ஒன்றின் சொத்துக்களை எஸ்.பி.ஐ., பறிமுதல் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு கூறியதாவது:
பெரிய நிறுவனங்களுக்கு பெருமளவு கடன்களை வழங்கும் போது, வங்கிகள் அந்நிறுவனங்களுக்கு அதிக சிரமத்தை தராமல் அலட்சியமாக செயல்படுகின்றன. ஆனால், தனிப்பட்ட தேவைகளுக்காக சிறிய கடன்களை பெறும் சாதாரண மக்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சில நேரங்களில், இது எல்லை மீறிய தொந்தரவாக கூட மாறுகிறது.
கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் தேவைகளை தளர்த்த வேண்டும் என, நீதிமன்றத்தால் வலியுறுத்த முடியாது. எனினும், சாமானியர்கள் கடன் பெற விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் எளிமையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம். இந்த வழக்கில், 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை வழங்கியதில், எஸ்.பி.ஐ., மற்றும் அதன் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர்.
கடன் பெற்ற நிறுவனம், தவணையை தொடங்க கூட முடியவில்லை. இதுவே, கடன் பெறுபவர்களின் திருப்பி செலுத்தும் திறனை அதிகாரிகள் சரியாக மதிப்பீடு செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டதற்கான அறிகுறியாகும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதி எல்லா டாக்குமெண்ட் சரியா இருந்தா வீட்டு லோன் ஈசி யா கிடைக்கும்,நான் அபார்ட்மெண்ட் புக்கிங் அமௌன்ட் மட்டும் கட்டினேன்,மீதி எல்லாம் சபை லோன்
சட்டத்தில் வெறும் ஓட்டை தான் அதனால்தான் இந்தியா தடுமாறுகிறது :
லஞ்சம்தான்
பெரிய நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் அவ்வளவு கடுமையான கெடுபிடிகள் விதிப்பதில்லை காரணம் அவர்கள் தகுந்த முறையில் வங்கி மேலாளர்களை கவனிப்பார்கள்
சட்டத்தில் வெறும் ஓட்டை தான் அதனால்தான் இந்தியா தடுமாறுகிறது
பெரிய கம்பெனி திவாலாச்சுன்னா அரசாங்கம் கடன் குடுத்த வங்கிகளுக்கு தள்ளுபடி செஞ்சு புதுசா வங்கிகளுக்கு வரவும் வெக்கும். நிறைய வங்கிகள் வாராக்கடனை தள்ளுபடி செஞ்சு பேலன்ஸ் ஷீட்டை இம்ப்ரூவ் பண்ணியதும் இப்பிடித்தான். உனக்கும், எனக்கும்.கடன் குடுத்தால் ரிசர்வ் பேங்க் சண்டைக்கு வந்துரும். வங்கி அதிகாரிகளை காய்ய்ச்சி எடுக்கும். இப்பிடியே ஏழைகளாய் காலத்தை ஓட்டணும் இல்லே வழிப்பறி, திருட்டில் இறங்கி முன்னேறனும்.
அது சரி கோர்ட் நிலை என்ன அரசியல் அமைப்புக்கள் அரசியலா வாதிகள் பணம் படைத்தவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவைகளின் வழக்குகள் முன்னுரிமை பெறுகிறது சாமானியன் வழக்குகள் தலைமுறைகள் கடந்து நூற்றுகணக்கான வாயாதாக்களால் இழுத்தடிக்கும் சுகிர்தன்.முதலில் தன் வீட்டை சுத்தபடித்துவிட்டு அறிவுரை வழங்கலாம்
காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்த நிலைமை இருந்தது .... இப்போதுமா ?
இத்தனை கோடி பேர் முத்ரா கடனை எளிதாகப் பெற்று திருப்பிச் செலுத்தியுள்ளனர். வங்கிகளின் வாராக்கடன் விகிதமும் ஒரு சதவீதத்துக்கு கீழ் இறங்கிவிட்டது. போர் நடக்கும் காலம் என்பதால் கடன் தருவது ரிஸ்க் நிறைந்தது.அதிகாரிகள் அஞ்சுவது இயற்கை .எனினும் அரசு வங்கிகளின் லாபம் நன்கு அதிகரித்துள்ளது. கோர்ட் க்கு உண்மை நிலை தெரிவிக்கப்படவில்லையா?.
நேர்மையாக கடனை திருப்பி செலுத்தும் ஆட்களுக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை.... ஆனால் கடனை திருப்பி செலுத்தாமல் போகும் கார்பரேட் நிறுவனங்களுக்கு... வங்கிகள் தாராளமாக கடன் வழங்குகின்றன.... அவை தடுக்கப்பட வேண்டும் !!!
என்ன செய்வது அரசாங்கமே பெரிய நிறுவனங்களுக்கு தான் சாதகமா இருக்கிறது ...மேலும்
-
விளம்பர செய்தி... செயின்ட் ஆண்டனிஸ் பள்ளி சாதனை
-
ஞாயிறு: சோழர் பட்டறையில் துாரிகைகளின் திருவிழா கேன்வாசில் கவிதைபாடும் ஓவியங்கள்
-
அலுவலக விருப்பம்: பி.எஸ்., மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 26ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
-
துாய்மை இயக்கப் பணி கூடுதல் கலெக்டர் ஆய்வு
-
தி.மு.க., ஆய்வு குழு வருகை மாவட்ட செயலாளர் தகவல்
-
தகவல் சுரங்கம்