சூரிய, காற்றாலை மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு; மோடி தலைமைக்கு கமல் பாராட்டு
சென்னை: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய, காற்றாலை ஆற்றல் திறன் அதிகரித்துள்ளது என நடிகர் கமல் பாராட்டியுள்ளார்.
இது குறித்து கமல் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: என் அன்புள்ள நாட்டு மக்களே... இன்று ஈரான் போரின் தாக்கத்தால் ஆழ்ந்த கவலையுடன் ஒரு இந்தியனாக உங்களிடம் பேசுகிறேன். எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடல் வர்த்தக பாதைகள் முடக்கப்பட்டுள்ளன. நமது சமையலறைக்கும், வீடுகளுக்கும் தேவையான எரிசக்தி, நமது வயல்களையும் பயிர்களையும் வளர்க்கும் உரங்கள், நமது தொழிற்சாலைகளையும் வாகனங்களையும் இயக்கும் எரிபொருள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன.
எரிசக்தி
இதற்கு பதிலடியாக, 60க்கும் மேற்பட்ட நாடுகள் எரிபொருட்கள் சேமிப்பு தொடர்பாக பல்வேறு விதிகளை அமல்படுத்தியுள்ளன. சமீபத்தில் சிங்கப்பூர் பிரதமர் தம் மக்களை கடினமான காலங்களுக்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். நாம் மிகப் பெரிய நாடு. நமது பிரதமர் அடுத்த ஒரு வருடத்தில் எரிசக்தியை சேமிக்கும்படி நம்மை கேட்டுள்ளார்.
இத்தகைய தருணங்களில், தேசியப் பொறுப்பு கட்சி அரசியலைத் தாண்டி உயர வேண்டும். வாஜ்பாயின் புகழ்பெற்ற வார்த்தைகளில் கூறியது போல் — “அரசுகள் வரும், போகும்... ஆனால் நாடு தொடரும்.” 1962 சீனப் போரின்போது நாம் வீடுகளில் இருந்த தங்கத்தை நன்கொடையாக அளித்தோம்.
பாராட்டுகிறேன்
1965ல் உணவு தானியங்கள் பற்றாக்குறை ஏற்பட்டபோது, லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு உணவைத் தவிர்க்கும்படி மக்களிடம் கேட்டார். இன்று இந்தியா அத்தகைய தியாகத்தை எதிர்பார்க்கவில்லை.
ஆனால் நாம் நிச்சயம் நமது நாட்டுக்காக சிறிய சேமிப்புகளைச் செய்ய வேண்டும். ஒரு மையவாதியாக, எனது அரசியல் கூட்டணிகளைத் தாண்டி நல்ல வேலைகளைப் பாராட்டுகிறேன். பிரதமரின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளில் சூரிய மற்றும் காற்று எரிசக்தி திறன் பெரிதும் அதிகரித்துள்ளது.
நடவடிக்கை
நிலக்கரி எரிவாயு மாற்றம், புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு எரிசக்தி ஆகியவற்றில் சமீபத்திய முதலீடுகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. ஆனால் தியாகம் மக்களிடமிருந்து மட்டும் எதிர்பார்க்கப்படக் கூடாது. அரசுகளும் பங்கு வகிக்க வேண்டும்.
எனவே பிரதமரை அனைத்து முதலமைச்சர்களுடனும் தேசிய உச்சி மாநாடு நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும். உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நெருக்கடி
பெட்ரோல், டீசலில் உள்ள VAT உள்ளிட்ட மாநில வரிகளை குறைக்க வேண்டும். ரயில், மெட்ரோ, பஸ் கட்டணங்களை குறைக்க வேண்டும். இதனால் மக்கள் தனியார் வாகனங்களை விட்டு பொதுப் போக்குவரத்துக்கு மாறலாம்.
இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு அலகு எரிசக்தியும் நாளை இந்தியாவை வலுப்படுத்தும்.
சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி எண்ணெயும் ஏழை இந்தியரை பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கும். இந்த நெருக்கடியை ஒன்றாக எதிர்கொண்டால், இந்தியா வலுவாக வெளிவரும். இவ்வாறு கமல் பேசி உள்ளார்.
5 வருடமாக அடமானம் வைக்கப்பட்டு இருந்த வாய் இப்பொழுது மீட்கப்பட்டு விட்டது
இவுரு இதை சாக்காக வைத்து இருக்குற பிஜே பி எம் பிக்கள் எல்லாரையும் தனித்தனியா பாராட்டி ஒரு அறிக்கை உட்டாதான் எங்களிக்கி சந்தோஷமா இருக்கும். காலம் பொன் போன்றது. தாமதப்படுத்தாம நாளிக்கே அறிக்கை உட்டுடுங்கோ. அப்புறம் அரசியலில் என்னா நடக்கும்னு சொல்ல முடியாதுங்கோ.
கமல் ஹாசன் ரயிலில் பயணம் செய்வதில்லை என்று தெரிகிறது.
தாம்பரம் to கோடம்பாக்கம் Rs 5
Tambaram to beach Rs 10/-.
Velachery to Mylapore. Rs 5/-
இதை விட எப்படி கம்மியாக இருக்கும்.
இவர் 1970 களில் ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு, 2024 இல்
வாங்கிய சம்பளம் எவ்வளவு.
இவர் அணிந்து இருக்கும் ஆடை அணிகலன்களின் விலை எவ்வளவு.
மலிவான கைத்தறி அல்லது கதர் ஆடை ஏன் அணிவதில்லை. முதலில் இவர் எதற்காக MP, MLA ஆகியோருக்கு
Pension கொடுப்பதை எதிர்க்கவில்லை .
ஊருக்கு உபதேசம் செய்வதில் வல்லவர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் , இவருக்கு கொஞ்சம் தமிழில் படிக்க தெரியும் என்பது தான். இவருடைய தேசப்பற்றுக்கு என்ன சொல்ல. யாரோ ஒரு டமிலர் எழுதிய வாசகத்தை சாரி வசனத்தை
நன்றாக ஒப்பித்து பதிவிட்டுள்ளார்..
இவர்..... இவ்வளவு நாட்களாக கோமாவில் இருந்தாரா... திமுக ஆட்சி செய்த 5 ஆண்டுகள் வாயே திறக்கவில்லை........ இப்போது விலைவாசியை குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்.... டாஸ்மாக் சாராய கடைகளை மூட வேண்டும் என்று கூறுகிறார்.... என்னவாயிற்று இவருக்கு ?
என்ன சாத்தான் வேதம் ஓதுது
ஒரு நாள் பத்திரப்பதிவு செய்யும் ரெஜிஸ்திரார் அலுவலகம் போலீஸ் ஸ்டேஷன் மின்சாரவாரிய அலுவலகம் கார்பொரேஷன் ஆபீஸ் சென்று லஞ்சம் வாங்குவது நின்று விட்டதா என்று பேட்டி கொடுக்கட்டும்
எப்பவும் விள்க்கெண்ணையில் நறுக்கிப் போட்ட வெண்டைக்காயை விட குழப்பமாக அறிக்கை விடும் நீர் , தெளிவான அறிக்கை வெளியிடுள்ளீர் அப்படியென்றால் 1 யாரோ எழுதிக் கொடுத்து அதை உமது பெயரில் வெளியிட்டுள்ளீர். 2 உமது மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பீரா ? வாய்ப்பில்லை 3 உமது இராஜ்ய சபா சம்பளம் வசதிகளைக் குறைத்துக் கொள்வீரா ? இல்லை 4 நடிக்க வாங்கும் காசை குறைத்துக் கொள்வீரா? இல்லை. 5 நீர் பொதுப் போக்குவரத்திற்கு மாறுவீரா? இல்லை 6 நீர் கால் கழுவும் அறிவாலயம் ஆண்ட போது வாட் வரியைக் குறைக்கச் சொன்னீரா? இல்லை எதுவுமே தெரியாமல அறிக்கை மட்டும் ஏன்? அதுவும் மைய அரசைப் பாராட்டி அமலாக்கத் துறையில் எலி எதுவும் மாட்டியுள்ளதா? எதுவாக இருந்தாலும் சரி புரியும் படியாக அறிக்கை வெளியிட்டதற்கு நன்றி.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும்போது மூடிக்கிட்டு இருந்தார். இப்போ என்னடான்னா அரசே சாராயக்கடைகளை நடத்த கூடாதாம், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேணுமாம். இத்தனை நாளாக என்ன பண்ணிக்கிட்டு இருந்தான்னு தெரியலே. பிரதமர் இந்தியாவை எந்த உயரத்தில் கொண்டுசென்றிருக்கிறார் என்பதை மனசார வாழ்த்த இவருக்கு பயமா இருக்கோ என்னவோ?
முதல்முதலாக புரியும் படியாக ஒரு கருத்தை சொல்லி இருக்கிரார்.மேலும்
-
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
-
25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
-
சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்
-
வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்