விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் வேலாண்மை  உற்பத்திக்குழு கூட்டம்  மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கவுள்ளது. 

சட்டசபை தேர்தல் காரணமாக குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படாமல் இருந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மக்கள் குறைகேட்பு கூட்டங்கள் மற்றும் அரசுத்துறைகளின் ஆய்வு கூட்டங்கள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த ஒரு மாதமாக நடைபெறாமல் இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் இரண்டாவது தள கூட்டரங்கில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும், விவசாயிகளும் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement