கோவையில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு விஜய் போனில் ஆறுதல்
கோவை: கோவையில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு விஜய் போனில் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அனைத்து உதவிகளும் செய்யப்படும் என விஜய் உறுதி அளித்துள்ளார்.
கோவை சூலூர் அருகே கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் நேற்று மாலை அவர்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் உக்கம்பட்டி காடு கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இன்று சிறுமியின் வீட்டுக்கு சென்ற தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சிறுமியின் தந்தைக்கு ஆறுதல் கூறி வீடு கட்ட நிலம் தருவதாக கூறினர்.
@block_Y@
சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றவனுக்கு கடும் தண்டனை பெற்றுத்தருவதாக முதல்வர் விஜய் உறுதி அளித்தார்; என சிறுமியின் பாட்டி நிருபர்களிடம் தெரிவித்தார்.
block_Y
ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு உறுதியுடன் செயல்படும் என்று உறுதியளித்த முதல்வர் விஜய் கோவையில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து மிகுந்த வேதனை தெரிவித்தார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
கோவை சிறுமி பெற்றோரிடம் உடைந்து பேசிய முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட், யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அதெப்படி... ஒருவர் 5 வருஷம் ஆண்டு போதை, குடிக் கலாச்சாரத்தால் தமிழகத்தைச் சீரழித்தபின்னர் ஒருத்தர் வந்த உடனேயே, அவர் பொறுப்பை ஏத்துக்கணுமா? இதென்னா போங்கு? திமுக தொடங்கிய தொடர் அதிர்வு அழிவுகள், அடங்க நேரம் வேணும் பாஸ்.. எனக்கு தவெக என்ன சாதிக்கும் அப்படீங்கறதுல "டௌட்" இருக்கு.. ஆனா அதுக்குன்னு எல்லாம் இப்போத்தான் நடக்குதுங்கற மாதிரி பேசமாடேன்..
குற்றம் செய்பவனுக்கு பயம் இருக்க வேண்டும். வெளியே இருப்பதை விட உள்ளே சிறையில் பல வசதிகள். இரண்டு கால் மூட்டிலும் சுட்டு, நாலு அயோக்கியன்களை வெளியிலே காட்டுங்கள். எந்த தவறும் நடக்காது. அது தான் யோகியின் மாடல்.
முகம்
தவெக திமுகவின் Xerox copy என்பதை திரும்ப திரும்ப நிருபித்து கொண்டே இருக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
கள்ள சாராயம் குடித்து இறந்தால் 20 லட்சம் ..
இங்கே கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தி ஊரெங்கும் டாஸ்மாக் திறந்து பல ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்து சம்பாதிப்பது யார் ...
திமுக ஆட்சியின் போது நடந்த குற்ற செயல்களுக்கு ஸ்டாலின்தான் பொறுப்புன்னு மேடையில் பேசினீர்கள், இப்போ, CM சார், நீங்க பொறுப்பு ஏற்க்கிறீர்களா...
விடியா மூஞ்சியை பார்த்தாலே இங்கே எவனுக்கும் விடியாது ....
....ஏன் நேரில் போய் ஆறுதல் சொன்னால் குடி முழுகிவிடுமா?? ....இல்லை பனையூர் வந்து சந்திக்கனுமா ??....
அந்த சிறுமியின் அம்மா பேச்சுக்கு 10 கோடி கொடுக்கலாம்