தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் ராஜினாமா!
சென்னை: தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்வது என்ற நிலைப்பாட்டை எடுத்தோம் என்று அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்து விலகி பின்னர் தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
மே 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. மே 7ம் தேதி அதிமுகவில் பல்வேறு பிரச்னைகள் நடந்தது. தலைமைக்குழு நிர்வாகிகள் இரண்டு நிலைப்பாடுகளை எடுத்தனர். ஒன்று திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இன்னொன்று தவெகவுக்கு ஆதரவு அளித்து, ஆளுங்கட்சி போன்று நம்மால் மக்கள் பணியாற்ற முடியும் என்ற இரு நிலைப்பாடுகளை எடுத்தனர்.
எங்களுக்கு திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை. இது அங்கேயுள்ள எம்எல்ஏக்கள் பலர் மனதிலும் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. நாங்கள் முன்னதாக முடிவு எடுத்து விட்டோம். சிவி சண்முகம் தலைமையில் 30 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர். திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கக்கூடாது என்று தான் 30 எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டோம்.
தவெக ஆதரவு நிலைப்பாட்டை தான் எடுத்தோம். நாங்கள் அதிமுகவை விட்டு போகவில்லை. ஆனால் அன்றைய தினத்தில் இருந்து அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவதூறாக பல்வேறு விமர்சனங்களை வைத்தனர். தொகுதியில் எங்களை பற்றி அவதூறு பரப்புகின்றனர்.
எங்களின் நிலைப்பாடு என்னவென்றால் துரோகம் செய்யும் விதமாக திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க மனம் விரும்பவில்லை. எங்களை போன்றவர்கள் அங்கே இருக்கின்ற்னர், நாங்கள் முன்னதாகவே முடிவு எடுத்துவிட்டோம்.
கடந்த முறை அதிகார அளவில் திமுக ஆட்சியில் இருந்தது. நாங்கள் சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் 10 சதவீதம் கோரிக்கை கூட நிறைவேற்ற முடியவில்லை. இந்த முறையும் எங்களால் எதிர்க்கட்சியாக செயல்பட முடியாது. இம்முறையும் மக்கள் எங்களை எம்எல்ஏவாக வெற்றி பெற வைத்தனர். அவர்களின் நிலைப்பாட்டை புரிந்து தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இது எங்களின் தனிப்பட்ட நிலைப்பாடு. சுயநலத்துக்காக எடுக்கவில்லை.
சுயமரியாதைக்காகவும், எங்களின் தொகுதி மக்களின் நலன்களுக்காகவும் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அதேபோன்று, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு, முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றோம். அவர் பதவியேற்று 15 நாட்கள் கூட ஆகவில்லை. பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார். நல்லாட்சி கொடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது. இடைத்தேர்தலில் நாங்கள் வேட்பாளரா இல்லையா என்பதை தலைமை முடிவு எடுக்கும். அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.
இவ்வாறு மரகதம் குமரவேல் கூறினார்.
இதை போல admk விலிருந்து ஆட்களை இழுக்கும் விஜய் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற போவது இல்லை கேவலமான செயல் குதிரை பேரம் நடத்தும் விஜய் சட்டப்படி தண்டனை பெறுவார்
உங்களை மக்கள் மிக கடுமையாக தோற்கடிப்பார்கள் பதவிக்கும் அதிகாரத்துக்கும் ஆசை பட்டு விலை போய் விட்டீர்கள் tvk தீ ய சக்தி என்று சொன்ன கட்சியின் கூட்டணி கட்சிகளோடு ஆட்சி அமைத்துள்ளதே அது சரியா admk ஒரு மாபெரும் கட்சி அதற்கு துரோகம் செய்த உங்களுக்கு எதிர்காலம் இனி இல்லை ஆம் ஆத்மீ கட்சி கடை தெரியமா அதை போல tvk காணாமல் போகும் குழந்தைகளை வைத்து வெற்றி பெற்ற tvk இனி வரும் காலங்களில் தோற்பது uruthi
மக்கள் வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுப்பது என்பது மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதற்காகவே. மக்கள் சேவை செய்ய எந்த அரசியல் கட்சியிலும் இருக்கவேண்டுமென்பதில்லை. இதுபோல வெற்றிபெற்றவுடன் ராஜினாமா செய்தால் மறுதேர்தல் நடத்த மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே மாரு தேர்தல் செலவை ராஜினாமா செய்யும் வேட்பாளரிடமிருந்து வசூல்செய்யவேண்டும். அல்லது நடைபெற்ற தேர்தலில் வாக்குகளின் அடிப்படையில் இரண்டாமிடத்தில் இருப்பவரை அறிவிக்கவேண்டும். பொருளாதார நெருக்கடியாக இருக்கும் இந்நாளில் அரசாங்கங்கள் மக்களை சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்கவேண்டுமென அறிவுறுத்திவிட்டு மக்கள் வரிப்பணத்தில் மறுதேர்தல் நடத்துவதென்பது மக்களை முட்டாளாக்குவதற்கு சமம்
தொகுதி மக்கள் என பொய் சொல்லாதீர்கள் உங்களை பணப்பேய் பிடித்து ஆட்டுவதால் பணத்திற்காக கொத்தடிமையாக போகிறீர் இடைத்தேர்தலுக்காக ஆகிற செலவை கண்டிப்பாக ராஜினாமா செய்தவனுங்க ஏற்றுக்கொள்ள வேண்டும்
மக்கள் சேவை இல்லை , வாக்காளர்களுக்கு துரோகம் விஜய் இவர்களை சேர்த்து தவறு
அப்படி என்ன உணர்வு இருக்கிறது என்று புரிந்தவர்கள் பிஸ்தா..
லாட்டரி பணம் விளையாடுகிறது
சந்தர்ப்பவாத அரசியல் சாக்கடைகள்
இது உலக மக நடிப்பு டா சாமி மீண்டும் தேர்தலில் நின்றால் மக்கள் இவர்களை படு தோல்வி அடையச் செய்ய வேண்டும்
தொளபதி சொன்னாரே - இரண்டாவது பவர் சென்டர் கிடையாது என்று.. இரண்டாவது தன்னை சொன்னாரோ? ஆதவ் தான் எல்லாம் இங்கே.. முதல்வர் டம்மி .. லாட்டரி கும்பல் ஆட்சி தான் நடக்குது.. அம்மா ஜெயலலிதா இருந்த வரை தலைமறைவா இருந்த கும்பல் இப்போ அந்த கட்சியையே கை பற்றி விட்டது.. எல்லாம் பணம் / பேராசை .. இன்னும் என்ன எல்லாம் நடக்கபோகுதோ?மேலும்
-
மத்திய அரசின் கல்வி திட்டங்கள் விழிப்புணர்வு: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு
-
போக்சோ வழக்குகள்: மாநிலம் முழுவதும் விபரங்கள் சேகரிப்பு
-
ரோகித் பத்மஸ்ரீ விருது பெற வராதது ஏன்?
-
ஜனநாயகம் மீறப்படவில்லை: அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்
-
எம்.எல்.ஏ., ராஜினாமா; கணவர் நீக்கம்
-
இனி தனி சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க.,