பிரதமரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., வலியுறுத்தல்

4

சென்னை: 'பிரதமர் மோடியை விமர்சனம் செய்த நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: திருநெல்வேலியில் சமூக வலைதளத்தில், முதல்வர் விஜயை தரக்குறைவாக விமர்சனம் செய்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது சரியே. அநாகரிகமான, கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்த, அந்த நபருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

அதே நேரத்தில், முதல்வரை இப்படி பேசுவோர் மீது மட்டும் நடவடிக்கை என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், யாரை பழித்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்த, செய்து கொண்டிருக்கும் நபர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு, முதல்வர் விஜய் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement