ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு தேவை

உடுமலை: கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

ஆனால், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதனால், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது குறித்து மக்கள் புகாரும் தெரிவித்துள்ளனர்.

எனவே, இப்பாலத்தில், மின்விளக்குகள் பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement