'ரூட்' மாறுகிறார் பா.ஜ., அண்ணாமலை; மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம்
சென்னை: 'ஒன்பதாம் வகுப்பில் இருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்ற திட்டத்தை, இந்தாண்டு முதல் அமல்படுத்தும் அறிவிப்பை, மத்திய கல்வி அமைச்சகம் உடனே திரும்பப் பெற வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: இந்தாண்டு ஏப்ரலில், சி.பி.எஸ்.இ., அமைப்பு, 'மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பில் இருந்து, மூன்று மொழிகள் கட்டாயம்; அந்த மூன்று மொழிகளில் இரு மொழிகள், இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்' என அறிவித்தது.
அப்போது, இந்தியாவின் பலதரப்பட்ட, இலக்கிய மற்றும் கலாசார பாரம்பரியத்தை, சிறு வயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
மேலும், ஏப்ரலில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'ஒன்பதாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, 2029 - 30 கல்வியாண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்படும்' என்றும், தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், இம்மாதம் 15ம் தேதி, சி.பி.எஸ்.இ., அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த கல்வியாண்டில் இருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ.,யின் திடீர் அறிவிப்பு, தமிழக மாணவர்களின் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனெனில், அவர்களின் குழந்தைகள், ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே, தாங்கள் விரும்பிய மொழியை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டு உள்ள புதிய அறிவிப்பின்படி, 'ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், மூன்று மொழிகளை கட்டாயமாக கற்க வேண்டும்; அதில், இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்; இந்தாண்டு ஜூலை முதலே அமலுக்கு வரும்' என்று கூறப்பட்டு உள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு புதிய மொழியை கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்த கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை, மத்திய கல்வி அமைச்சகம் உடனே திரும்ப பெற வேண்டும். முன்னர் அறிவித்தபடி, 2029 - 30 கல்வியாண்டில் இருந்து மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்தியாவில் 25 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இரண்டு மொழி மூன்று மொழியை மட்டும் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவது பச்சிளம்குழந்தைகளை கட்டாயப்படுத்துவது அபத்தம். அது இப்போது இருந்து இருந்தாலும் இனியும் பத்துவருடங்களுக்கு அப்புறம் இருந்தாலும்
யு ஆர் correct
பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. பா.ஜ.வில் மிகவும் பொறுப்பானவர். அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நேரிலோ, போனிலோ கருத்தை வலியுறுத்தி கூறி இருக்கலாமே? எதற்காக பொது வெளியில் அறிக்கை? இது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?
தர்மேந்திரா பிரதான் கேட்கிற ஆள் இல்லை.
Baffon fed up with Delhi suktans not giving plump post to him. Lunatic Guy.
மிகச் சரியான கூற்று அண்ணாமலை அவர்களுடையது மத்திய அரசு கலந்தாலோசிக்காமல் எடுத்த அவசர முடிவின் விளைவு இது பெற்றோர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் அடுத்த மாதமே இந்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டி வரும்
கட்சியிடம் பேசி சரி செய்திருக்கலாம் இப்படி பொது மேடையில் இல்லாமல்
அமைச்சர் பிரதான் அவர்களிடம் பேசுவதற்கு பதில் பொதுவெளியில் வேண்டுகோள் விடுப்பது நல்லதல்ல.
Yes. Annamalai on way to form separate party. This is only a pre. All the best to him.
அண்ணாமலை சொன்னா அது சரியாகத்தான் இருக்கும்.
தலைப்பு idum.bodhu சிந்தித்து செயல்படவும்.
தலைப்பில் என்ன குறை...இதுவரை குறிப்பா அதிமுகவை பாஜக சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் கீழ்தரமா கூட்டணி உள்ளே இருந்து கொண்டே திட்டுகிறார்கள்.மேலும்
-
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் தமிழருக்கு இடம்
-
26 கிராம விவசாயிகளை சந்தித்த நிகில் குமாரசாமி
-
'காஸ்' சிலிண்டர் வினியோகம் தாமதம் ஏஜன்சிகளுக்கு படையெடுக்கும் மக்கள்
-
சட்டசபை இடைத்தேர்தல் உறுதி: பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஏற்பு சிவகுமாருக்கு ஆப்பு வைத்த சித்தராமையா
-
முதல்வர் மாற்றத்தால் பயனில்லை: சலவாதி நாராயணசாமி கருத்து